ETV Bharat / bharat

மேற்கு வங்கத்திற்கான ஆக்ஸிஜன் உ.பிக்கு செல்கிறது - மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்திற்கான ஆக்ஸிஜனை உத்தரப் பிரதேசத்திற்கு மத்திய அரசு திசை திருப்பிவிடுவதாக மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Apr 23, 2021, 5:42 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக மேற்கொண்டு வருகிறார். துர்காப்பூர் பகுதி மக்களிடம் பேசிய அவர், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது, "மேற்குவங்கத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு உத்தரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு, மேற்கு வங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை திசை திருப்பிவிடுகிறது. இது மிகவும் கவலைக்குரியது.

பாஜக அல்லாத மாநிலங்களிடம் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துவருகிறது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க மேற்கு வங்க அரசு தொழிற்சாலைகளிடம் இருந்து ஆக்ஸிஜனை கொள்முதல் செய்கிறது" என்றார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு மேலும் ஒரு மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி காணொலி வாயிலாக மேற்கொண்டு வருகிறார். துர்காப்பூர் பகுதி மக்களிடம் பேசிய அவர், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது, "மேற்குவங்கத்தில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு உத்தரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு, மேற்கு வங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆக்ஸிஜனை திசை திருப்பிவிடுகிறது. இது மிகவும் கவலைக்குரியது.

பாஜக அல்லாத மாநிலங்களிடம் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துவருகிறது. இருப்பினும் நிலைமையை சமாளிக்க மேற்கு வங்க அரசு தொழிற்சாலைகளிடம் இருந்து ஆக்ஸிஜனை கொள்முதல் செய்கிறது" என்றார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு மேலும் ஒரு மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.