ETV Bharat / bharat

'யாரிடமும் பேச முடியவில்லை' - மம்தாவை கடுப்பேற்றிய பெகாசஸ்

author img

By

Published : Jul 21, 2021, 6:19 PM IST

நாட்டின் கூட்டாட்சித் தன்மையைத் தகர்க்கும்விதமாக பாஜக செயல்பட்டுவருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

Mamata Banerjee
Mamata Banerjee

ஆண்டுதோறும் ஜூலை 21ஆம் தேதி திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மாவீரர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1993 ஜூலை 21ஆம் தேதி, மம்தா தலைமையில் நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்க காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் நினைவாக மம்தா ஆண்டுதோறும் மாவீரர் நாளாக அனுசரித்துவருகிறார். இந்தாண்டு மாவீரர் நாளில் பங்கேற்று உரையாற்றிய திருணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதலமைச்சருமான மம்தா பெகாசஸ் விவகாரம் குறித்து கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.

அவர் பேசியதாவது, "கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும்விதமாக பாஜக அரசு செயல்பட்டுவருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்தாவிட்டால், நாடு அழிவின் பாதைக்குச் செல்லும்.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். எங்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. பெகாசஸ் மிகவும் ஆபத்தானது.

என்னால் தொலைபேசியில் யாரிடமும் பேச முடியவில்லை. பாஜக அரசு உளவு பார்க்க கோடி கோடியாகச் செலவிடுகிறது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 'ஜிலேபி சாப்பிடத் தடை' - ஆதங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி... சிரிப்பலையில் ட்விட்டர்!

ஆண்டுதோறும் ஜூலை 21ஆம் தேதி திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மாவீரர் நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1993 ஜூலை 21ஆம் தேதி, மம்தா தலைமையில் நடைபெற்ற பேரணியில் மேற்கு வங்க காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் நினைவாக மம்தா ஆண்டுதோறும் மாவீரர் நாளாக அனுசரித்துவருகிறார். இந்தாண்டு மாவீரர் நாளில் பங்கேற்று உரையாற்றிய திருணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதலமைச்சருமான மம்தா பெகாசஸ் விவகாரம் குறித்து கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.

அவர் பேசியதாவது, "கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும்விதமாக பாஜக அரசு செயல்பட்டுவருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்தாவிட்டால், நாடு அழிவின் பாதைக்குச் செல்லும்.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். எங்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. பெகாசஸ் மிகவும் ஆபத்தானது.

என்னால் தொலைபேசியில் யாரிடமும் பேச முடியவில்லை. பாஜக அரசு உளவு பார்க்க கோடி கோடியாகச் செலவிடுகிறது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 'ஜிலேபி சாப்பிடத் தடை' - ஆதங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி... சிரிப்பலையில் ட்விட்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.