ETV Bharat / bharat

தொடரும் தாக்குதல்... மேற்கு வங்கம் செல்கிறார் பாஜக தலைவர் நட்டா

author img

By

Published : May 4, 2021, 7:53 PM IST

டெல்லி: மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், பாஜகவினரைத் தாக்கும் செயல்கள் அதிகரித்துவருவதாக கூறப்படுவதால், தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா 2 நாள் பயணமாக கொல்கத்தா விரைகிறார்.

தொடரும் தாக்குதல்.. மேற்கு வங்கம் செல்கிறார் பாஜக தலைவர் நட்டா
தொடரும் தாக்குதல்.. மேற்கு வங்கம் செல்கிறார் பாஜக தலைவர் நட்டா

பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். இதுகுறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில், பாஜக தலைவர் ஜேபி நட்டா செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் இங்கு வருகை தர இருக்கிறார். நேற்று (மே 3) தேதி அவர் வன்முறையில் ஈடுபட்ட விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யவுள்ளார். திரிணாமூல் காங்கிரசார் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது’’ என்றார்.

இதற்கிடையே, திரிணாமூல் காங்கிரஸின் வன்முறையைக் கண்டித்து மே 5ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கரோனா விதிமுறையைப் பின்பற்றி அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பத்பரா நகரின் உள்ள பாஜக அலுவலகத்தில் 13 நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமூல் காங்கிரசார் கிடையாது என்று அவர்கள் கூறியுள்ளனர். பாஜகவினரே இத்தைகய செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறினர்.

மறுபக்கம் ஹவுராவில் பாஜகவினரின் அலுவலகங்கள் தாக்கப்பட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்விட்டீல், ஹவுராவில் உள்ள பாஜக அலுவலகங்களை திரிணாமூல் குண்டர்கள் தாக்கி சூறையாடியுள்ளனர். அங்கிருந்த பொருட்களையும் திருடிச் சென்றுவிட்டனர். வீடு புகுந்து பாஜகவினர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: துரைமுருகனை புலம்பவிட்டு "ஜூ" காட்டிய ராமு!

பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். இதுகுறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில், பாஜக தலைவர் ஜேபி நட்டா செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் இங்கு வருகை தர இருக்கிறார். நேற்று (மே 3) தேதி அவர் வன்முறையில் ஈடுபட்ட விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யவுள்ளார். திரிணாமூல் காங்கிரசார் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது’’ என்றார்.

இதற்கிடையே, திரிணாமூல் காங்கிரஸின் வன்முறையைக் கண்டித்து மே 5ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கரோனா விதிமுறையைப் பின்பற்றி அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பத்பரா நகரின் உள்ள பாஜக அலுவலகத்தில் 13 நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமூல் காங்கிரசார் கிடையாது என்று அவர்கள் கூறியுள்ளனர். பாஜகவினரே இத்தைகய செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்கள் கூறினர்.

மறுபக்கம் ஹவுராவில் பாஜகவினரின் அலுவலகங்கள் தாக்கப்பட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்விட்டீல், ஹவுராவில் உள்ள பாஜக அலுவலகங்களை திரிணாமூல் குண்டர்கள் தாக்கி சூறையாடியுள்ளனர். அங்கிருந்த பொருட்களையும் திருடிச் சென்றுவிட்டனர். வீடு புகுந்து பாஜகவினர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: துரைமுருகனை புலம்பவிட்டு "ஜூ" காட்டிய ராமு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.