ETV Bharat / bharat

துக்க வீட்டில் நடந்த துக்க நிகழ்வு: இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 21, 2020, 1:19 PM IST

புதுச்சேரி: திப்புராயப்பேட்டை அருகே துக்க வீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்ததில் கீழே விழுந்து உயிரிழந்தார்.

pondicherry crime news
மோதலில் இளைஞர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலம் திப்புராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவுடி திப்லான். இவர், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் அவரது கூட்டாளிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, நேற்று (அக்.20) அவரது இறப்பிற்கு வந்த உறவினர்கள் வீட்டின் அருகே கூடியிருந்தனர். அப்போது திப்லானின் எதிரியான பார்த்திபன் என்பவர் அங்கு வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் திப்லானின் நண்பர்கள் அவரை அடித்து துரத்தியுள்ளனர். அவர் ஊருக்குள் சென்று தான் தாக்கப்பட்டதை அவரது கூட்டாளிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து, திப்புராயப்பேட்டைக்கு வந்த கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கியதுடன், இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளது.

இந்த தகராறில் திப்லானின் உறவினரான சரவணன், விமல் ராஜ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர், விமல் ராஜ் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள மதில் சுவற்றில் ஏறி குதித்துள்ளார். அப்போது, அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியன்சாலை காவல் துறையினர், விமல் ராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன், மணிமாறன், கிரி, மதி, விக்கி, சாந்தகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் திப்புராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவுடி திப்லான். இவர், குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் அவரது கூட்டாளிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, நேற்று (அக்.20) அவரது இறப்பிற்கு வந்த உறவினர்கள் வீட்டின் அருகே கூடியிருந்தனர். அப்போது திப்லானின் எதிரியான பார்த்திபன் என்பவர் அங்கு வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் திப்லானின் நண்பர்கள் அவரை அடித்து துரத்தியுள்ளனர். அவர் ஊருக்குள் சென்று தான் தாக்கப்பட்டதை அவரது கூட்டாளிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து, திப்புராயப்பேட்டைக்கு வந்த கும்பல் அங்கிருந்தவர்களை தாக்கியதுடன், இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளது.

இந்த தகராறில் திப்லானின் உறவினரான சரவணன், விமல் ராஜ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர், விமல் ராஜ் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள மதில் சுவற்றில் ஏறி குதித்துள்ளார். அப்போது, அவர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியன்சாலை காவல் துறையினர், விமல் ராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன், மணிமாறன், கிரி, மதி, விக்கி, சாந்தகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.