ETV Bharat / bharat

மனைவி, குழந்தையை தீ வைத்து கொன்ற கணவர்

author img

By

Published : Jun 11, 2020, 12:39 AM IST

சண்டிகர்: மனைவி மற்றும் குழந்தைக்கு கணவரே தீ வைத்து கொன்ற சம்பவம் ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

wife-3-yr-old-daughter-die-after-husband-sets-them-on-fire-in-haryana
wife-3-yr-old-daughter-die-after-husband-sets-them-on-fire-in-haryana

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஷ்(32). இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். திருமணமான நாள் முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை தீவிரம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தீ வைத்து கொள்ளுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதில், அவரது மனைவியும், மூன்று வயதே ஆன மூத்த மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு வயதான இளைய மகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் ராஜேஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஷ்(32). இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர். திருமணமான நாள் முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை தீவிரம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தீ வைத்து கொள்ளுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதில், அவரது மனைவியும், மூன்று வயதே ஆன மூத்த மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு வயதான இளைய மகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் ராஜேஷை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.