ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு!

author img

By

Published : Sep 10, 2020, 10:01 PM IST

டெல்லி : 2020ஆம் ஆண்டின் இந்திய குடிமைப் பணிகளுக்கான பூர்வாங்க தேர்வில் பங்குபெறும் தேர்வாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டுமென மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவுறுத்தியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் மத்தியில் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு!
கரோனா அச்சுறுத்தல் மத்தியில் நடைபெறும் யுபிஎஸ்சி தேர்வு!

இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்), வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) ஆகிய இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை மூன்று கட்டங்களாக ஆண்டுதோறும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டுக்கான தேர்வு வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இந்தியாவில் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், "அனைத்து தேர்வாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கிருமி நாசினிகளை தேர்வாளர்கள் கொண்டு வர வேண்டும். தனி நபர் இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தேர்வு அறைகளுக்குள்ளும், அரங்க வளாகத்திலும் தனிப்பட்ட சுகாதார ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக கமிஷன் தனது இது குறித்த மேலதிகத் தகவல்களை இணையதளத்தில் (http://upsconline.nic.in) பதிவேற்றப்பட்டுள்ளது.

அதிலிருந்து, இ-அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து அதன் நகலெடுத்து வரவேண்டும். தேர்வின் ஒவ்வொரு அமர்விலும் தேர்வாளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையையும், இ-அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையையும் கொண்டு வர வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இ-அட்மிட் கார்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

தேர்வு தொடங்குவதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு நடைபெறும் இடத்திற்குள் தேர்வாளர்கள் வந்து சேர்ந்திருக்க வேண்டும். நுழைவு வாயில் மூடப்பட்ட பின்னர் எந்தவொரு தேர்வாளரும் தேர்வு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எவ்வாறாயினும், தகவல்தொடர்பு சாதனம் அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களாகப் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

கைப்பேசி, பேஜர், பென் டிரைவ், ஸ்மார்ட் கடிகாரங்கள், கேமரா, புளூடூத் சாதனங்கள் போன்ற மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட வேறு எந்த உபகரணங்களும் தேர்வு அரங்கிற்குள் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்), வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) ஆகிய இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை மூன்று கட்டங்களாக ஆண்டுதோறும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டுக்கான தேர்வு வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இந்தியாவில் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், "அனைத்து தேர்வாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கிருமி நாசினிகளை தேர்வாளர்கள் கொண்டு வர வேண்டும். தனி நபர் இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தேர்வு அறைகளுக்குள்ளும், அரங்க வளாகத்திலும் தனிப்பட்ட சுகாதார ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக கமிஷன் தனது இது குறித்த மேலதிகத் தகவல்களை இணையதளத்தில் (http://upsconline.nic.in) பதிவேற்றப்பட்டுள்ளது.

அதிலிருந்து, இ-அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்து அதன் நகலெடுத்து வரவேண்டும். தேர்வின் ஒவ்வொரு அமர்விலும் தேர்வாளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையையும், இ-அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையையும் கொண்டு வர வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இ-அட்மிட் கார்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

தேர்வு தொடங்குவதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு நடைபெறும் இடத்திற்குள் தேர்வாளர்கள் வந்து சேர்ந்திருக்க வேண்டும். நுழைவு வாயில் மூடப்பட்ட பின்னர் எந்தவொரு தேர்வாளரும் தேர்வு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எவ்வாறாயினும், தகவல்தொடர்பு சாதனம் அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களாகப் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

கைப்பேசி, பேஜர், பென் டிரைவ், ஸ்மார்ட் கடிகாரங்கள், கேமரா, புளூடூத் சாதனங்கள் போன்ற மின்னணு உபகரணங்கள் உள்ளிட்ட வேறு எந்த உபகரணங்களும் தேர்வு அரங்கிற்குள் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.