ETV Bharat / bharat

விமானத்தில் பயணித்த நபருக்கு கரோனா - விஸ்தாராவின் முக்கிய முடிவு!

author img

By

Published : Mar 31, 2020, 7:22 AM IST

தனது விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து விமான பணியாளர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் விஸ்தாரா அறிவுறுத்தியுள்ளது.

Vistara
Vistara

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்று, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதற்கு முக்கிய காரணம் விமான பயணம். விமானங்கள் மூலமே இந்த வைரஸ் தொற்று ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிவருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து கோவா வந்தவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதை கோவா அரசும் உறுதி செய்தது. அந்த நபர் மார்ச் 22ஆம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்கு விஸ்தாரா விமானம் மூலம் சென்றுள்ளார்.

கோவா அரசு அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து விஸ்தாரா நிறுவனம் தனது விமான பணியாளர்கள் கட்டாயம் 14 நாள்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அவர் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை அறிய உதவ தங்களிடமுள்ள அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் 0832-2421810/2225538 எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும். அல்லது அருகிலிருக்கும் சுகாதார மையத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா - ஒரு மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி கட்டாயம் அனுப்ப வேண்டும்!

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்று, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதற்கு முக்கிய காரணம் விமான பயணம். விமானங்கள் மூலமே இந்த வைரஸ் தொற்று ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிவருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து கோவா வந்தவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதை கோவா அரசும் உறுதி செய்தது. அந்த நபர் மார்ச் 22ஆம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்கு விஸ்தாரா விமானம் மூலம் சென்றுள்ளார்.

கோவா அரசு அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து விஸ்தாரா நிறுவனம் தனது விமான பணியாளர்கள் கட்டாயம் 14 நாள்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அவர் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை அறிய உதவ தங்களிடமுள்ள அனைத்து தகவல்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் 0832-2421810/2225538 எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டும். அல்லது அருகிலிருக்கும் சுகாதார மையத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா - ஒரு மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி கட்டாயம் அனுப்ப வேண்டும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.