நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் இளங்கலை வணிகம் படித்துவருகிறார். கரோனா ஊரடங்கால் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்விற்காக நேபாள-உத்தரகாண்ட் எல்லையில் உள்ள சர்வதேச தொங்கு பாலத்தை திறக்குமாறு அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து நேபாள நாட்டு அலுவலர்கள், பித்தோராகர் துணை ஆட்சியருடன் கலந்துரையாடி உள்ளனர். பின்னர், மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் பேரில், செப்டம்பர் 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொங்கு பாலத்தை திறந்தனர். இந்த பாலம் பத்து நிமிடங்கள்தான் திறக்கப்பட்டது. அப்போது பாலம் வழியாக 34 பேர் இந்தியாவிற்கு வந்தனர், 36 பேர் நேபாளத்திற்கு சென்றனர்.
இதுகுறித்து ஷாஷஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) ஆய்வாளர் காஷ்மிரா சிங் கூறுகையில், "நேபாள மாணவியின் தேர்வுக்காக பத்து நிமிடங்கள் மட்டும் பாலம் திறக்கப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க...மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக் கூடாது என்ற உத்தரவு நீக்கம்!