இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் (இறுதி ஆண்டு தவிர) செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீடு (Internal assessment) அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுதியாக வேண்டும். அதற்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.