ETV Bharat / bharat

காஷ்மீரில் அதிரடி: நான்கு பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை

author img

By

Published : Apr 22, 2020, 11:40 AM IST

ஸ்ரீநகர்: பாதுகாப்பு படை, பிரிவினைவாதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் நான்கு பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Terror
Terror

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இதனிடையே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையை தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில், சோபியான் மாவட்டம் மேல்ஹோரா பகுதியில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு படையினுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.

பிரிவினைவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சாப்பாட்டுக்காக சாலையில் திரியும் மக்கள்!

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இதனிடையே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையை தொடர்ந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில், சோபியான் மாவட்டம் மேல்ஹோரா பகுதியில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு படையினுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.

பிரிவினைவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சாப்பாட்டுக்காக சாலையில் திரியும் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.