ETV Bharat / bharat

பொன்பரப்பி விவகாரம்... விசிக போராட்டம்

புதுச்சேரி: பொன்பரப்பியில் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேதப்படுத்திய குற்றவாளிகள் அனைவரையும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

vck
author img

By

Published : Apr 24, 2019, 1:38 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் பொழிலன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், சுதேசி காட்டன் மில் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை. ரவிக்குமார் கலந்துகொண்டார்.

விசிக ஆர்ப்பாட்டம்

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’பொன்பரப்பியில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். அரியலூர் பொன்பரப்பி சம்பவம் கூட்டணியில் பாமக இருப்பது அதிமுக தலைமைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் பொழிலன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், சுதேசி காட்டன் மில் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை. ரவிக்குமார் கலந்துகொண்டார்.

விசிக ஆர்ப்பாட்டம்

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’பொன்பரப்பியில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். அரியலூர் பொன்பரப்பி சம்பவம் கூட்டணியில் பாமக இருப்பது அதிமுக தலைமைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.

Intro:பொன்பரப்பி சம்பவம் அதிமுகவிற்கு அதன் கூட்டணிக் கட்சி பாமக வினர் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர் என்று விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்


Body:புதுச்சேரி 24


அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்து உடைமைகளையும், குடியிருப்புகளையும், சேதப்படுத்திய குற்றவாளிகள் அனைவரையும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சி முதன்மை செயலர் பொழிலன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி காட்டன் மில் எதிரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சி பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சிப் பொதுச் செயலாளர் ரவிக்குமார்,

பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் . அரியலூர் பொன்பரப்பி சம்பவம் அதிமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் கூட்டணி இருப்பது அதிமுக தலைமைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது இச்சம்பவம் என்றார்


Conclusion:பொன்பரப்பி சம்பவம் அதிமுகவிற்கு அதன் கூட்டணிக் கட்சி பாமக வினர் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளனர் என்று விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.