ETV Bharat / bharat

சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த மூவர் கைது!

author img

By

Published : Jul 6, 2020, 4:16 AM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மூவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூவர் கைது!
பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அருகே உள்ள கிராமத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், 13 வயதான சிறுமி. இவருக்கு கடந்த சில நாள்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, அவரது பெற்றோர் சிறுமியை அப்பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 17 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமி வயலுக்குச் செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த சதாம், தவ்பிக், மம்மன் ஆகியோர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, குற்றவாளிகள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அருகே உள்ள கிராமத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், 13 வயதான சிறுமி. இவருக்கு கடந்த சில நாள்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, அவரது பெற்றோர் சிறுமியை அப்பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 17 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமி வயலுக்குச் செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த சதாம், தவ்பிக், மம்மன் ஆகியோர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, குற்றவாளிகள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.