ETV Bharat / bharat

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மூவர் இடைநீக்கம்! - 2021-22 Budget session

அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் மூவரை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

Rajya Sabha
ராஜ்ய சபா
author img

By

Published : Feb 3, 2021, 3:29 PM IST

2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது.

அப்போது ஆம் ஆத்மி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்த அம்மூவரையும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

அதையும் மீறி தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்ததால், சஞ்சய் சிங், சுஷில் குமார் குப்தா, என்.டி. குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களையும் இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கிரெட்டா தன்பெர்க், ரிஹான்னா... விவசாயிகளுக்கு ஆதரவாக ஒலிக்கும் சர்வதேச குரல்கள்!

2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது.

அப்போது ஆம் ஆத்மி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்த அம்மூவரையும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

அதையும் மீறி தொடர்ந்து கோஷம் எழுப்பி வந்ததால், சஞ்சய் சிங், சுஷில் குமார் குப்தா, என்.டி. குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களையும் இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்து வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கிரெட்டா தன்பெர்க், ரிஹான்னா... விவசாயிகளுக்கு ஆதரவாக ஒலிக்கும் சர்வதேச குரல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.