ETV Bharat / bharat

பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி கிராமம்!

பிளாஸ்டிக் கழிவை பராமரிப்பதில் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

author img

By

Published : Dec 12, 2019, 10:58 PM IST

Rajasthan
Rajasthan

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தடை விதிப்பதற்கு முன்பாகவே, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேசவ்புரா என்கிற கிராமம் மேற்கொண்டது. பிளாஸ்டிக்குகளை உட்கொண்டு பல கால்நடைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள உள்ளதாக கிராமத்தினர் முடிவெடுத்தனர்.

ஜூலை 11ஆம் தேதி 2019ஆம் ஆண்டு, பிளாஸ்டிக் கழிவுகளை குழித் தோண்டி புதைத்து கிராமத்தினர் அதற்கு தீ வைத்தனர். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை இனி ஒருபோதும் பயன்படுத்த போவதில்லை என கிராமத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். இது அவர்களுக்கு மட்டும் நிம்மதி அளிக்கவில்லை, பல கால்நடைகளுக்கு இது ஆறுதல் அளிக்கும் விதத்தில் இருந்தது. இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை விதித்தனர்.

பிரதமர் மோடி

இதன்விளைவாக, ஜூலை மாதம் முதல் நடந்த 11 பெரிய நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பிளேட்கள், கிளாஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளுக்கு பதில் உலோகத்தால் ஆன குப்பை தொட்டிகளை கிராமம் முழுவதும் பயன்படுத்த கிராம நிர்வாக ஆணையம் திட்டமிட்டுள்ளது. காகிதப்பை, துணிப்பை போன்றவற்றை ஷாப்பிங் செய்தவற்காக கிராமத்தினர் பயன்படுத்திவருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேசவ்புரா கிராமம். 600 பேர் மட்டுமே வாழும் இந்த கிராமம் பல கிராமங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

இதையும் படிங்க: தலிபான்களுடனான பேச்சு பலன் தராது! - அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்

ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தடை விதிப்பதற்கு முன்பாகவே, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேசவ்புரா என்கிற கிராமம் மேற்கொண்டது. பிளாஸ்டிக்குகளை உட்கொண்டு பல கால்நடைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள உள்ளதாக கிராமத்தினர் முடிவெடுத்தனர்.

ஜூலை 11ஆம் தேதி 2019ஆம் ஆண்டு, பிளாஸ்டிக் கழிவுகளை குழித் தோண்டி புதைத்து கிராமத்தினர் அதற்கு தீ வைத்தனர். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை இனி ஒருபோதும் பயன்படுத்த போவதில்லை என கிராமத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். இது அவர்களுக்கு மட்டும் நிம்மதி அளிக்கவில்லை, பல கால்நடைகளுக்கு இது ஆறுதல் அளிக்கும் விதத்தில் இருந்தது. இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை விதித்தனர்.

பிரதமர் மோடி

இதன்விளைவாக, ஜூலை மாதம் முதல் நடந்த 11 பெரிய நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பிளேட்கள், கிளாஸ்கள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளுக்கு பதில் உலோகத்தால் ஆன குப்பை தொட்டிகளை கிராமம் முழுவதும் பயன்படுத்த கிராம நிர்வாக ஆணையம் திட்டமிட்டுள்ளது. காகிதப்பை, துணிப்பை போன்றவற்றை ஷாப்பிங் செய்தவற்காக கிராமத்தினர் பயன்படுத்திவருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கேசவ்புரா கிராமம். 600 பேர் மட்டுமே வாழும் இந்த கிராமம் பல கிராமங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

இதையும் படிங்க: தலிபான்களுடனான பேச்சு பலன் தராது! - அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்

Intro:Body:

Blank


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.