ETV Bharat / bharat

’சமரச முயற்சியின் அடிப்படையில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ - திருமாவளவன்

author img

By

Published : Nov 9, 2019, 5:28 PM IST

அயோத்தி வழக்கின் தீர்ப்பு சமூக நல்லிணக்கத்தை கருத்தில்கொண்டு சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

thirumavalavan opinion about ayodthya verdict

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. பல வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை வெளிட்டுள்ளார். அதில், "அயோத்தி வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே அமைந்துள்ளது.
அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவனின் கருத்து
அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவனின் கருத்து

நாட்டின் நலன் கருதி, சமூக அமைதியின் தேவை கருதி அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கருத்து!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. பல வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை வெளிட்டுள்ளார். அதில், "அயோத்தி வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே அமைந்துள்ளது.
அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவனின் கருத்து
அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவனின் கருத்து

நாட்டின் நலன் கருதி, சமூக அமைதியின் தேவை கருதி அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கருத்து!

Intro:Body:இந்தியர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த அயோத்தியா வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ட்விட்டரில் கருத்து பதவிட்டுள்ளார். அதில்,

"பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை.
சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது.

பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் அகழ்வாய்வில் அங்கே கோவில் எதுவும் இல்லை என்னும் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம்தானே.
சாஸ்திரங்களின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இசுலாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க அளித்துள்ள தீர்ப்பு நீதியை நிலைநாட்டும் முயற்சியாக இல்லாமல் சமரச முயற்சியாகவே தெரிகிறது.

ராமர் கோவிலை கட்டுவதற்கு மைய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல பாபர் மசூதியை கட்டுவதற்கும் ஏன் அறக்கட்டளையை நிறுவக் கூடாது?

இசுலாமியர்கள் உரியஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில்
இந்து அமைப்புகள் என்னஆவணங்களை ஒப்படைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. சாஸ்திரங்களின் அடிப்படையிலாக இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கியிருப்பது அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

நாட்டின் நலன் கருதி, சமூக அமைதியின் தேவை கருதி அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.