ETV Bharat / bharat

மனநலம் குன்றிய பிகார் இளைஞரை மீட்ட தேனி காவல் துறையினர்!

author img

By

Published : Jun 20, 2019, 7:15 PM IST

தேனி: பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் குன்றிய பிகார் இளைஞரை மீட்ட காவல் துறையினர், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

bihar

பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும்படியான வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், முருகமலை வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட வடகரை காவல் துறையினர், அந்த இளைஞரைச் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை மீட்ட காவல் துறையினர், ஆண்டிபட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் காப்பகத்தில் தங்கவைத்தனர்.

குடும்பத்துடன் மீட்கப்பட்ட பிகார் இளைஞர்

இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது தாய் பரிமளா, சகோதரர் மண்ட்டு பஸ்வான் ஆகியோர் மூலம் தெரியவந்தது. பின்னர், இன்று காலை, பெரியகுளம் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரின் குடும்பத்தினர் அவரை அழைத்துச் சென்றனர்.

இந்த இளைஞர் காணாமல்போனது சம்பந்தமாக ஏற்கனவே காவல் துறையில் புகார் அளித்து, பல இடங்களில் தேடிவந்ததாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முருகமலையிலிருந்து மீட்கப்பட்ட அந்த இளைஞர் பிகார் மாநிலம் கதிகர் மாவட்டத்திலுள்ள மன்ச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனடிப்படையில், அவரது தாய், சகோதரர் எங்களுடன் தொடர்பு கொண்டு, பெரியகுளம் காவல்நிலையம் வந்து அழைத்துச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும்படியான வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், முருகமலை வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட வடகரை காவல் துறையினர், அந்த இளைஞரைச் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை மீட்ட காவல் துறையினர், ஆண்டிபட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் காப்பகத்தில் தங்கவைத்தனர்.

குடும்பத்துடன் மீட்கப்பட்ட பிகார் இளைஞர்

இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது தாய் பரிமளா, சகோதரர் மண்ட்டு பஸ்வான் ஆகியோர் மூலம் தெரியவந்தது. பின்னர், இன்று காலை, பெரியகுளம் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரின் குடும்பத்தினர் அவரை அழைத்துச் சென்றனர்.

இந்த இளைஞர் காணாமல்போனது சம்பந்தமாக ஏற்கனவே காவல் துறையில் புகார் அளித்து, பல இடங்களில் தேடிவந்ததாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முருகமலையிலிருந்து மீட்கப்பட்ட அந்த இளைஞர் பிகார் மாநிலம் கதிகர் மாவட்டத்திலுள்ள மன்ச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனடிப்படையில், அவரது தாய், சகோதரர் எங்களுடன் தொடர்பு கொண்டு, பெரியகுளம் காவல்நிலையம் வந்து அழைத்துச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Intro: பீஹார் வாலிபர் தேனியில் மீட்பு. மனவளர்ச்சி குன்றிய நிலையில் முருகமலை வனப்பகுதிகளில் சுற்றி திரிந்த வரை உறவினர்களிடம் ஒப்படைத்த பெரியகுளம் காவல்துறையினர்.


Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்காளாக சந்தேகப்படும்படியாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் முருகமலை வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு அந்த வாலிபரிடம் வடகரை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பது தெரியவந்தது. பின்னர் ஆண்டிபட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் காப்பகத்தில் அந்த இளைஞர் தங்க வைக்கப்பட்டார்.
இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்று அவரது தாய் மற்றும் சகோதரர்கள் மூலம் தற்போது தெரிய வந்தது. இன்று காலை பெரியகுளம் காவல் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரின் தாய் பரிமளா பஸ்வான் மற்றும் சகோதரர் மன்ட்டு பஸ்வான் ஆகியோர் இளைஞர் காணாமல் போனது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பல இடங்களில் தேடி வந்த நிலையில், தற்போது இங்கு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் மற்றும் மனவளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படும் இவரை முருகமலை வனப்பகுதியில் இருந்து மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தோம். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் தற்போது அவரது தாய் மற்றும் சகோதரர்கள் இவரை தேடி வந்துள்ளனர். அவர்கள் அளித்த விபரங்களின்படி காப்பகத்தில் இருப்பவர் இவர்களது உறவினர் தான் என தெரியவந்தது. இவர் பீகார் மாநிலம் கடிகர் மாவட்டத்தை சேர்ந்த மன்ச்சூர் பகுதியை சேர்ந்த டிங்கு குமார் பஸ்வான் (22) என
தெரிவித்தனர்.



Conclusion: அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இளைஞரை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.