ETV Bharat / bharat

அடகு நகைகளை மீட்பதாகக் கூறி வழிப்பறி - விசாரணையில் அம்பலம்

author img

By

Published : Oct 28, 2019, 4:47 PM IST

புதுச்சேரி: அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு விற்றுத் தருவதாகக் கூறி நான்கு லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் ராகுல் தெரிவித்தார்.

gang arrested

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

புதுச்சேரி பாக்கம் உடையான்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 24ஆம் தேதி மூன்று லட்சம் ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிப்பறி செய்தது. இது குறித்து புதுச்சேரி மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், தேவா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் இந்தக் குற்றத்துக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், அடகுவைத்த நகைகளை மீட்க முடியாதவர்கள் தங்களை அணுகுமாறும், அவற்றை மீட்டு கூடுதல் விலைக்கு விற்றுத் தருவதாக அறிவழகன் விளம்பரம் செய்துள்ளார்.

gang arrested

இதனை நம்பி தொடர்பு கொள்பவர்களிடம் பணத்தை எடுத்து வரச் சொல்லி, கும்பல் மூலம் வழிப்பறி செய்துள்ளார். இது தொடர்பாக விநாயகமூர்த்தி, அவரது கூட்டாளிகளான ஐயப்பன், சிலம்பரசன், சந்தோஷ் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து நான்கு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், மொபைல்ஃபோன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

புதுச்சேரி பாக்கம் உடையான்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 24ஆம் தேதி மூன்று லட்சம் ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிப்பறி செய்தது. இது குறித்து புதுச்சேரி மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், தேவா ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் இந்தக் குற்றத்துக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், அடகுவைத்த நகைகளை மீட்க முடியாதவர்கள் தங்களை அணுகுமாறும், அவற்றை மீட்டு கூடுதல் விலைக்கு விற்றுத் தருவதாக அறிவழகன் விளம்பரம் செய்துள்ளார்.

gang arrested

இதனை நம்பி தொடர்பு கொள்பவர்களிடம் பணத்தை எடுத்து வரச் சொல்லி, கும்பல் மூலம் வழிப்பறி செய்துள்ளார். இது தொடர்பாக விநாயகமூர்த்தி, அவரது கூட்டாளிகளான ஐயப்பன், சிலம்பரசன், சந்தோஷ் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து நான்கு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம், மொபைல்ஃபோன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் தெரிவித்தார்.

Intro:புதுச்சேரியில் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு விற்று தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்


Body:
புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அழுவாள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்


புதுச்சேரி பாக்கம் உடையான் பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் கடந்த 24-ந்தேதி 3 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு கும்பல் கத்தி குத்தி வழிப்பறி செய்தது இது குறித்து புதுச்சேரி மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இதனையடுத்து அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை கொண்டு புதுச்சேரி சேர்ந்த சந்தோஷ் ,தேவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் தகவல்படி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஐயப்பன், சிலம்பரசன் ,விநாயகமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர் இந்தக் குற்றச் சம்பவங்கள் மூளையாக செயல்பட்ட அறிவழகன் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அடகு வைத்த நகைகளை மீட்க முடியாத அவர்களை தங்களை அணுகும் படியும் அவற்றை மீட்டு கூடுதல் விலைக்கு விற்றுத் தருவதாக விளம்பரம் செய்துள்ளார் இதனை நம்பி தொடர்பு கொள்பவர்களிடம் கையில் இருக்கும் பணத்தை எடுத்து வரச் சொல்லி ஒரு கும்பல் மூலம் வழிப்பறி செய்து உள்ளார் அதேபோல் 3 சம்பவங்களை அறிவழகன் போடும் திட்டத்தை செயல்படுத்திய கும்பல் தலைவர் வினாயகமூர்த்தி அவரது கூட்டாளிகள் ஐயப்பன் ,சிலம்பரசன், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயையும் இருசக்கர வாகனங்கள் மொபைல் போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் அழுவாள் தெரிவித்தார் மேலும் பேசுகையில்

புதுச்சேரியில் உச்சநீதிமன்றம் அனுபவித்து அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் தெரிவித்தார்


Conclusion:புதுச்சேரியில் அடகு வைத்த நகைகளை மீட்டு கூடுதல் விலைக்கு விற்று தருவதாக கூறி 4 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.