கிழக்குப் பெங்களூரு பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட பேரிரைச்சல் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுவந்த நிலையில், இந்திய விமானப்படை இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.
அதில், இந்திய விமானப் படையினர், போர் விமானங்களை பயிற்சியில் ஈடுபடுத்தியபோது ஒலியின் வேகத்தைவிட அதிகளவு வேகமாக காற்றில் விமானங்கள் பயணித்ததால் இந்த சத்தம் ஏற்பட்டது. மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு புறநகர் பகுதியில் பயிற்சி வீரர்கள் 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில் ஒலியின் வேகத்தைவிட அதிகமாக பயணித்துள்ளது. இதன்காரணமாக எழும்பிய சத்தம் இடி போன்ற பேரிரைச்சலை உருவாக்கும். இதுவே, பெங்களூரு புறநகர் பகுதியில் ஏற்பட்ட பெரும் சத்தத்திற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
-
whose Test Pilots & Flight Test Engineers routinely test out all aeroplanes. The sonic boom was probably heard while the aircraft was decelerating from supersonic to subsonic speed between 36,000 and 40000 feet altitude.
— PRO Bengaluru, Ministry of Defence (@Prodef_blr) May 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">whose Test Pilots & Flight Test Engineers routinely test out all aeroplanes. The sonic boom was probably heard while the aircraft was decelerating from supersonic to subsonic speed between 36,000 and 40000 feet altitude.
— PRO Bengaluru, Ministry of Defence (@Prodef_blr) May 20, 2020whose Test Pilots & Flight Test Engineers routinely test out all aeroplanes. The sonic boom was probably heard while the aircraft was decelerating from supersonic to subsonic speed between 36,000 and 40000 feet altitude.
— PRO Bengaluru, Ministry of Defence (@Prodef_blr) May 20, 2020
நேற்று, இந்த சத்தம் குறித்து விமானப்படையினரிடம் கேள்வி எழுப்பியபோது, எவ்வித விமானங்களும் வான் வெளியில் பறக்கவிடப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம், ஆம்பன் புயல் கரையைக் கடப்பதினால் உருவான சத்தம், ஏலியன்கள் பூமிக்கு வரத் தொடங்கியுள்ளனர் என பல்வேறு கட்டுக்கதைகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிழக்குப் பெங்களூரு மக்களை பீதிக்குள்ளாக்கிய விநோத சத்தம்!