ETV Bharat / bharat

கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட 17 வயது பெண் : உத்தரப் பிரதேசத்தில் தொடரும் அத்துமீறல்கள்

author img

By

Published : May 29, 2020, 11:20 PM IST

முசாஃபர் நகர்: உத்தரப் பிரதேசத்தில் 17 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாலியல் வன்புணர்வு
பாலியல் வன்புணர்வு

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர் நகர் மாவட்டத்தில் போபா காவல் நிலையத்தின் கீழ் உள்ள போரா ஹேதி கிராமத்தில், 17 வயது பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதனை காணொலி பதிவு செய்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் வயல்வெளிக்கு பொழுதைக் கழிக்க சென்றபோது, அவரை மூவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி காணொலி பதிவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் துறையினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மூவரும் அவரை அச்சுறுத்தியதாகவும் அப்பெண்ணின் தந்தை காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதே மாவட்டத்தின் மீரான்பூர் நகரில் குடிநீர் குழாயில் நீர்பிடிக்க வந்த ஏழு வயது சிறுமியை, ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று, அக்குழந்தை கத்தியதைத் தொடர்ந்து தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மது வாங்க பணம் தராத தாயைக் கொன்ற குடிகாரன்!

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர் நகர் மாவட்டத்தில் போபா காவல் நிலையத்தின் கீழ் உள்ள போரா ஹேதி கிராமத்தில், 17 வயது பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி அதனை காணொலி பதிவு செய்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் வயல்வெளிக்கு பொழுதைக் கழிக்க சென்றபோது, அவரை மூவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி காணொலி பதிவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் துறையினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மூவரும் அவரை அச்சுறுத்தியதாகவும் அப்பெண்ணின் தந்தை காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதே மாவட்டத்தின் மீரான்பூர் நகரில் குடிநீர் குழாயில் நீர்பிடிக்க வந்த ஏழு வயது சிறுமியை, ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று, அக்குழந்தை கத்தியதைத் தொடர்ந்து தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மது வாங்க பணம் தராத தாயைக் கொன்ற குடிகாரன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.