ETV Bharat / bharat

உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? - அஞ்சும் தெலுங்கு தேசம்

author img

By

Published : Mar 6, 2020, 11:23 AM IST

அமராவதி: ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற அச்சம் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்தை தொற்றிக் கொண்டுள்ளது.

Andhra news  TDP  YSRCP  Andhra local body elections  YSRCP flag colour from govt buildings  TDP urges remove YSRCP flag colour from govt buildings  ஆந்திரா உள்ளாட்சி தேர்தல், அரசு கட்டடங்களில் ஒய்.எஸ்.ஆர். கட்சிக் கொடி வண்ணம் பூச்சு, தெலுங்கு தேசம், கால வெட்கட் ராவ், மாநில தேர்தல் ஆணையம், புகார்  local body polls
TDP urges SEC to remove YSRCP flag colour from govt buildings ahead of local body polls

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் கால வெங்கட் ராவ், மாநிலத் தேர்தல் ஆணையர் என். ரமேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். கிராம பஞ்சாயத்துக் கட்டடங்கள், சாலைகள், வகுப்பறைகள், அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் கட்சிக்கொடி வண்ணம் பூசப்படுகிறது.

சில பகுதிகளில் அக்கட்சியின் கட்சிக் கொடியான மின்விசிறியும் வரையப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2019ஆம் ஆண்டு மாநில தேர்தல் ஆணையம் சில வரைமுறைகளை வகுத்தது. இந்தச் சட்ட வரைமுறைகளுக்கு முற்றிலும் எதிராகத் தற்போது நடந்துவருகிறது.

ஏனெனில் எந்தவொரு வேட்பாளரும் தங்கள் கட்சி சின்னங்களை, தனியார் மற்றும் அரசு சுவர்களில் பயன்படுத்தக் கூடாது. ஆகவே ஜனநாயகத்தின் விழுமியங்களைக் காப்பாற்றும் வகையில், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

பொதுமக்களிடையே நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், அரசு சுவர்களில் ஒய்.எஸ்.ஆர். நிற வண்ணப்பூச்சுகளைத் தடுத்துநிறுத்த வேண்டும். தேர்தலை நடத்துவதில் ஆணையம் ஒருசார்பற்ற முறையில் செயல்படுவது பொருத்தமாக இருக்கும்.

ஒய்.எஸ்.ஆர். ஆதரவாளர்கள் உள்ளாட்சிப் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த கால வெட்கட் ராவ், “உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டுவதாகத் தேர்தல் ஆணையர் உறுதியளித்தார்” என்றார்.

இதையும் படிங்க: 'இது ஒருவகை சர்வாதிகாரம்'- குமுறும் காங்கிரஸ் எம்.பி.

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் கால வெங்கட் ராவ், மாநிலத் தேர்தல் ஆணையர் என். ரமேஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். கிராம பஞ்சாயத்துக் கட்டடங்கள், சாலைகள், வகுப்பறைகள், அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் கட்சிக்கொடி வண்ணம் பூசப்படுகிறது.

சில பகுதிகளில் அக்கட்சியின் கட்சிக் கொடியான மின்விசிறியும் வரையப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2019ஆம் ஆண்டு மாநில தேர்தல் ஆணையம் சில வரைமுறைகளை வகுத்தது. இந்தச் சட்ட வரைமுறைகளுக்கு முற்றிலும் எதிராகத் தற்போது நடந்துவருகிறது.

ஏனெனில் எந்தவொரு வேட்பாளரும் தங்கள் கட்சி சின்னங்களை, தனியார் மற்றும் அரசு சுவர்களில் பயன்படுத்தக் கூடாது. ஆகவே ஜனநாயகத்தின் விழுமியங்களைக் காப்பாற்றும் வகையில், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

பொதுமக்களிடையே நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், அரசு சுவர்களில் ஒய்.எஸ்.ஆர். நிற வண்ணப்பூச்சுகளைத் தடுத்துநிறுத்த வேண்டும். தேர்தலை நடத்துவதில் ஆணையம் ஒருசார்பற்ற முறையில் செயல்படுவது பொருத்தமாக இருக்கும்.

ஒய்.எஸ்.ஆர். ஆதரவாளர்கள் உள்ளாட்சிப் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த கால வெட்கட் ராவ், “உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டுவதாகத் தேர்தல் ஆணையர் உறுதியளித்தார்” என்றார்.

இதையும் படிங்க: 'இது ஒருவகை சர்வாதிகாரம்'- குமுறும் காங்கிரஸ் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.