ETV Bharat / bharat

பாஜக ஐ.டி பிரிவு தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் சுப்ரமணியன் சுவாமி!

author img

By

Published : Sep 9, 2020, 4:19 PM IST

டெல்லி: பாஜக தொழிற்நுட்ப பிரிவின் தலைவர் செல் அமித் மால்வியாவை பதவி நீக்கம் செய்யக் கோரி பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக ஐ.டி பிரிவுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் சுப்ரமணியன் சுவாமி!
பாஜக ஐ.டி பிரிவுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் சுப்ரமணியன் சுவாமி!

அண்மைக் காலமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராகவும், அவரது கடந்த கால அரசியல் தொடர்பாகவும் விமர்சிக்கும் வகையில் பல பதிவுகள் பரவலாகி வருகின்றன. இதற்கு பின்னணியில் பாஜகவின் தொழிற்நுட்ப பிரிவு உள்ளதாக சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "பாஜகவின் தொழிற்நுட்ப (ஐ.டி.) பிரிவினரில் சிலர் ஆதாரமற்று என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். போலியான முகவரிகளில் இருந்து ட்வீட்களை வெளியிடுகின்றனர். இந்த பதிவுகளால் கோபமடையும் எனது ஆதரவாளர்களும், பின்தொடர்பவர்களும் இதே போல தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தினால் பொறுப்பேற்க முடியாது.

நாளைக்குள் (செப்டம்பர் 10) பாஜக ஐடி பிரிவு தலைவர் மால்வியா அவரது பொறுப்பிலிருந்து அகற்றப்படாவிட்டால் நான் என்னை தற்காத்துக் கொள்ள பதில் கொடுக்கத் தொடங்குவேன். மகாபாரதத்தில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கான ஐந்து கிராமங்களை வழங்கக் கோரிக்கை வைத்து ஒரு இறுதி திட்டத்தை கௌரவ மன்னர் த்ரித்ராஷ்டிரரை அணுகுவார். கௌரவர்கள் அதனை மறுத்ததால், அதன் பிறகு போரை தவிர வேறு வழியில்லை என்று கிருஷ்ணர் கூறினார்.

அதையே தான் நானும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கூறுகிறேன். நான் இதைப் புறக்கணிக்க வேண்டுமென்றால், அவர்களை பாஜக பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

அண்மைக் காலமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராகவும், அவரது கடந்த கால அரசியல் தொடர்பாகவும் விமர்சிக்கும் வகையில் பல பதிவுகள் பரவலாகி வருகின்றன. இதற்கு பின்னணியில் பாஜகவின் தொழிற்நுட்ப பிரிவு உள்ளதாக சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "பாஜகவின் தொழிற்நுட்ப (ஐ.டி.) பிரிவினரில் சிலர் ஆதாரமற்று என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். போலியான முகவரிகளில் இருந்து ட்வீட்களை வெளியிடுகின்றனர். இந்த பதிவுகளால் கோபமடையும் எனது ஆதரவாளர்களும், பின்தொடர்பவர்களும் இதே போல தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தினால் பொறுப்பேற்க முடியாது.

நாளைக்குள் (செப்டம்பர் 10) பாஜக ஐடி பிரிவு தலைவர் மால்வியா அவரது பொறுப்பிலிருந்து அகற்றப்படாவிட்டால் நான் என்னை தற்காத்துக் கொள்ள பதில் கொடுக்கத் தொடங்குவேன். மகாபாரதத்தில் கிருஷ்ணர் பாண்டவர்களுக்கான ஐந்து கிராமங்களை வழங்கக் கோரிக்கை வைத்து ஒரு இறுதி திட்டத்தை கௌரவ மன்னர் த்ரித்ராஷ்டிரரை அணுகுவார். கௌரவர்கள் அதனை மறுத்ததால், அதன் பிறகு போரை தவிர வேறு வழியில்லை என்று கிருஷ்ணர் கூறினார்.

அதையே தான் நானும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கூறுகிறேன். நான் இதைப் புறக்கணிக்க வேண்டுமென்றால், அவர்களை பாஜக பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.