ETV Bharat / bharat

'கோட்சேவின் துப்பாக்கி பத்திரமாக உள்ளது..!' - சுப. வீரபாண்டியன்

திண்டுக்கல்: "கோட்சேவின் துப்பாக்கி ஐந்தாண்டுகளுக்கு தேவைப்படுகிற அளவிற்கு போதுமான தோட்டாக்கள் நிரப்பப்பட்டு பத்திரமாக உள்ளது" என்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 26, 2019, 12:35 PM IST

சுப. வீரபாண்டியன்

திண்டுக்கல்லில் தனியார் மஹாலில் நடைபெற்ற நூல் அறிமுக கருத்தரங்கு கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் நேற்று கலந்து கொண்டார். இவ்விழாவில் கருஞ்சட்டை பெண்கள், கோட்சேவின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது உள்ளிட்ட இரு நூல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய சுப.வீரபாண்டியன், "கோட்சேவின் துப்பாக்கி ஐந்தாண்டுகளுக்கு தேவைப்படுகிற அளவிற்கு போதுமான தோட்டாக்கள் நிரப்பப்பட்டு பத்திரமாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது அழுதுகொண்டே சிரிப்பது போல் ஆகிவிட்டது. உண்மையில் தேர்தல் முடிவுகளினால் சிரிப்பைவிட நம் மக்களிடையே அழுகைதான் கூடுதலாக உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தை விட மோடியின் புதிய ஆட்சி கடுமையான காலமாக இருக்கும். இவை அச்சுறுத்தல் அல்ல.. எச்சரிக்கை. எதனையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம்.

சுப. வீரபாண்டியன்

இந்த தேர்தலினால் இந்தியா தென் இந்தியா, வட இந்தியா என இரு பகுதிகளாக பிரிந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் திராவிட நாடு ஒரே நிலையில் வெளிப்படுகிறது. அடிப்படையிலேயே இந்தியாவின் அரசியல் கலாச்சார அரசியலாக உள்ளது. ஆனால், திராவிட அரசியல் என்பது கலாச்சார போர் படை. இது துவங்கப்பட்டதன் காரணமே பிற்போக்கு பண்பாட்டிற்கு எதிராக போர் தொடுக்கத்தான்" என்று கூறினார்.

திண்டுக்கல்லில் தனியார் மஹாலில் நடைபெற்ற நூல் அறிமுக கருத்தரங்கு கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் நேற்று கலந்து கொண்டார். இவ்விழாவில் கருஞ்சட்டை பெண்கள், கோட்சேவின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது உள்ளிட்ட இரு நூல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய சுப.வீரபாண்டியன், "கோட்சேவின் துப்பாக்கி ஐந்தாண்டுகளுக்கு தேவைப்படுகிற அளவிற்கு போதுமான தோட்டாக்கள் நிரப்பப்பட்டு பத்திரமாக உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது அழுதுகொண்டே சிரிப்பது போல் ஆகிவிட்டது. உண்மையில் தேர்தல் முடிவுகளினால் சிரிப்பைவிட நம் மக்களிடையே அழுகைதான் கூடுதலாக உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தை விட மோடியின் புதிய ஆட்சி கடுமையான காலமாக இருக்கும். இவை அச்சுறுத்தல் அல்ல.. எச்சரிக்கை. எதனையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம்.

சுப. வீரபாண்டியன்

இந்த தேர்தலினால் இந்தியா தென் இந்தியா, வட இந்தியா என இரு பகுதிகளாக பிரிந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் திராவிட நாடு ஒரே நிலையில் வெளிப்படுகிறது. அடிப்படையிலேயே இந்தியாவின் அரசியல் கலாச்சார அரசியலாக உள்ளது. ஆனால், திராவிட அரசியல் என்பது கலாச்சார போர் படை. இது துவங்கப்பட்டதன் காரணமே பிற்போக்கு பண்பாட்டிற்கு எதிராக போர் தொடுக்கத்தான்" என்று கூறினார்.

Intro:திண்டுக்கல் 25.5.19

கோட்சேவின் துப்பாக்கி ஐந்தாண்டுகளுக்கு தேவைப்படுகிற தோட்டாக்கள் நிரப்பப்பட்டு பத்திரமாக உள்ளது : சுப. வீரபாண்டியன்


Body:திண்டுக்கல்லில் தனியார் மஹாலில் நடைபெற்ற நூல் அறிமுக கருத்தரங்கு கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டார். இவ்விழாவில் கருஞ்சட்டை பெண்கள் மற்றும் கோட்சேவின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது உள்ளிட்ட இரு நூல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய சுப.வீரபாண்டியன்,"கோட்சேவின் துப்பாக்கி ஐந்தாண்டுகளுக்கு தேவைப்படுகிற போதுமான தோட்டாக்கள் நிரப்பப்பட்டு பத்திரமாக உள்ளது.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது அழுதுகொண்டே சிரிப்பது போல் ஆகிவிட்டது. உண்மையில் தேர்தல் முடிவுகளினால் சிரிப்பை விட நம் மக்களிடையே அழுகைதான் கூடுதலாக உள்ளது.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தை விட மோடியின் புதிய ஆட்சி கடுமையான காலமாக இருக்கும். இவை அச்சுறுத்தல் அல்ல, எச்சரிக்கை எதனையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம்.

இந்த தேர்தலினால் இந்தியா தென் இந்தியா, வட இந்தியா என இரு பகுதிகளாக பிரிந்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் திராவிட நாடு ஒரே நிலையில் வெளிப்படுகிறது. அடிப்படையிலேயே இந்தியாவின் அரசியல் கலாச்சார அரசியலாக உள்ளது. ஆனால் திராவிட அரசியல் என்பது கலாச்சார போர் படை. இது துவங்கப்பட்டதன் காரணமே பிற்போக்கு பண்பாட்டிற்கு எதிராக போர் தொடுக்கத்தான்" என்று கூறினார்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.