ETV Bharat / bharat

ரயில் மறியலில் ஈடுபட்ட மும்பைவாசிகள்!

author img

By

Published : Jul 22, 2020, 5:41 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகள் சரிவர இயங்காததால், அதிருப்தி அடைந்த பயணிகள், மும்பையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள நல்லசோபரா ரயில் நிலையத்தில் இயங்கும் உள்ளூர் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் மறியலில் ஈடுபட்ட மும்பை வாசிகள்!
ரயில் மறியலில் ஈடுபட்ட மும்பை வாசிகள்!

அதிகரித்துவரும் கரோனா பரவலை கருத்தில்கொண்டு, மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி) இன்று காலை முதல் மும்பைக்கு செல்லும் புறநகர் பேருந்து சேவைகளை நிறுத்தியது. இதன்காரணமாக பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

ரயில்களில் அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் மட்டுமே பயணிக்க அனுதிக்கப்படுவதால், ரயிலில் பயணிக்க முடியாமல் பலரும் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.

கரோனா வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூர் சேவைகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியர்களை ஏற்றிச்செல்ல ரயில்வே நிர்வாகம் கடந்த மாதம் மும்பையில் புறநகர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கியது.

இதன்காரணமாக விரக்தியடைந்த பயணிகள், உள்ளூர் ரயிலை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, ரயில்வே அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

முன் அறிவிப்பு ஏதுமின்றி, பேருந்துகள் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், ஏராளமான பயணிகள் நள்ளசோபரா பேருந்து நிலையத்தில், சிக்கித் தவிப்பதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.

மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய இடங்களைச் சேர்ந்த பயணிகள் உள்ளூர் ரயில் சேவைகள் - நாட்டின் வணிக மூலதனத்தின் உயிர்நாடியான ரயில் சேவையை உடனடியாக மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும், இல்லை என்றால் சிறப்பு ரயில்கள் மூலம் அதிகமான வகை தொழிலாளர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

அதிகரித்துவரும் கரோனா பரவலை கருத்தில்கொண்டு, மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி) இன்று காலை முதல் மும்பைக்கு செல்லும் புறநகர் பேருந்து சேவைகளை நிறுத்தியது. இதன்காரணமாக பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

ரயில்களில் அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் மட்டுமே பயணிக்க அனுதிக்கப்படுவதால், ரயிலில் பயணிக்க முடியாமல் பலரும் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.

கரோனா வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூர் சேவைகள், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியர்களை ஏற்றிச்செல்ல ரயில்வே நிர்வாகம் கடந்த மாதம் மும்பையில் புறநகர் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கியது.

இதன்காரணமாக விரக்தியடைந்த பயணிகள், உள்ளூர் ரயிலை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, ரயில்வே அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

முன் அறிவிப்பு ஏதுமின்றி, பேருந்துகள் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், ஏராளமான பயணிகள் நள்ளசோபரா பேருந்து நிலையத்தில், சிக்கித் தவிப்பதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.

மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய இடங்களைச் சேர்ந்த பயணிகள் உள்ளூர் ரயில் சேவைகள் - நாட்டின் வணிக மூலதனத்தின் உயிர்நாடியான ரயில் சேவையை உடனடியாக மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும், இல்லை என்றால் சிறப்பு ரயில்கள் மூலம் அதிகமான வகை தொழிலாளர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.