ETV Bharat / bharat

மூன்று மாதத்திற்கான உணவு பொருள்களை பெறலாம் - ராம்விலாஸ் பஸ்வான் - மத்திய உணவு மற்றும் பொதுவினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

டெல்லி: கரோனா தொற்று காரணமாக மாநில அரசுகள் அடுத்த மூன்று மாதத்திற்கு தேவையான உணவு பொருள்களை இந்திய உணவு நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

minister
minister
author img

By

Published : Mar 24, 2020, 12:29 PM IST

Updated : Mar 24, 2020, 1:07 PM IST

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 592 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 31ஆம் தேதி வரை 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கோவிட்-19 பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மார்ச் 31ஆம் தேதிவரை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளையும் மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.

தற்போது, மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது, "கரோனா பரவுதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மக்களுக்கு தேவையான உணவு பற்றாக்குறையை தீர்க்கவேண்டியது மத்திய அரசின் கடமை.

அந்த வகையில், மாநில அரசுகள் மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு பொருள்களை வழங்கிட அடுத்த மூன்று மாதத்திற்கான உணவு பொருள்களை இந்திய உணவு நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கரோனா பரவுதலை தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தொற்றை எதிர்த்துப் போராட தொழிலதிபர்கள் உதவ வேண்டும் - பிரியங்கா காந்தி

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 592 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 31ஆம் தேதி வரை 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கோவிட்-19 பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மார்ச் 31ஆம் தேதிவரை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளையும் மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.

தற்போது, மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது, "கரோனா பரவுதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மக்களுக்கு தேவையான உணவு பற்றாக்குறையை தீர்க்கவேண்டியது மத்திய அரசின் கடமை.

அந்த வகையில், மாநில அரசுகள் மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு பொருள்களை வழங்கிட அடுத்த மூன்று மாதத்திற்கான உணவு பொருள்களை இந்திய உணவு நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கரோனா பரவுதலை தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தொற்றை எதிர்த்துப் போராட தொழிலதிபர்கள் உதவ வேண்டும் - பிரியங்கா காந்தி

Last Updated : Mar 24, 2020, 1:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.