ஆந்திராவின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் நாட்டின் சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) குறித்து இரண்டு நாட்கள் கருத்தரங்கம் இன்று (ஜன24) தொடங்கியது. இந்த கருத்தரங்கம் நாளைவரை இரண்டு நாட்கள் நடக்கிறது. நாட்டின் நகரங்களை, சீர்மிகு நகரமாக தரம் உயர்த்தும் வகையில் மக்களுக்கான நகரங்களை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில், ஆந்திராவின் புதிய தலைவநகராக உருவாகிவரும் அமராவதிக்கு செயல்பாட்டு விருதும், மிதக்கும் சூரிய தகடுகள் அமைத்த விசாகப்பட்டினம் நகருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: தடுப்பூசி மருந்து கேட்ட மாலத்தீவு: உதவிய இந்தியா!