ETV Bharat / bharat

முன்னேற்றப் பாதையில் இந்தியா - சுகாதாரத் துறை நம்பிக்கை

டெல்லி : கரோனா வைரஸ் போராட்டத்தில் இந்தியா முன்னேறி வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 26, 2020, 11:23 PM IST

harsha vardhan
harsha vardhan

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் ஹர்ஷவர்தன், " கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவிட்-19 நோய்க்கு எதிராகப் போராட்டத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. முன்னர் ஹாட்ஸ் ஸ்பாட்டுகளாக (அதிகம் பாதிக்கப்பட்டதாக) அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் ஊரடங்கையும், தொற்று கட்டுப்படுத்தல் யுத்திகளையும் முறையாக அமல்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான படுக்கைகளையும், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைத் தேவையான அளவில் வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு செய்யும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

நாட்டில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களுள் இதுவரை ஐந்தாயிரத்து 913 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 21.90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 26 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் 826 பேர் உயிரிழந்துவிட்டனர்" என்றார்.

இதையும் படிங்க : வூஹானில் யாருக்கும் கோவிட்-19 இல்லை!

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் ஹர்ஷவர்தன், " கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவிட்-19 நோய்க்கு எதிராகப் போராட்டத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. முன்னர் ஹாட்ஸ் ஸ்பாட்டுகளாக (அதிகம் பாதிக்கப்பட்டதாக) அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் ஊரடங்கையும், தொற்று கட்டுப்படுத்தல் யுத்திகளையும் முறையாக அமல்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான படுக்கைகளையும், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைத் தேவையான அளவில் வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு செய்யும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

நாட்டில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களுள் இதுவரை ஐந்தாயிரத்து 913 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 21.90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 26 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் 826 பேர் உயிரிழந்துவிட்டனர்" என்றார்.

இதையும் படிங்க : வூஹானில் யாருக்கும் கோவிட்-19 இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.