ETV Bharat / bharat

கொரோனா: ஜெகந்நாத் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடு

பூரி: பிரபல ஜெகந்நாத் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் பக்தர்கள் சுய தகவல் படிவத்தை கண்டிப்பாக நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Mar 16, 2020, 3:01 PM IST

self declaration form
self declaration form

ஓடிசாவில் பூரி பகுதியில் பிரபலமான ஜெகந்நாத் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில், நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசிடமிருந்து தப்பிப்பதற்குப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன.

அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் ஜெகந்நாத் கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துள்ளது. அதில், கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் சுய தகவல் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும். அந்தப் படிவத்தில், தங்களின் குடும்பத்தினர் யாருக்காவது சளி, காய்ச்சல் உள்ளதா என்றும் கொரோனா பாதித்துள்ள பகுதிகளுக்கு கடந்த 15 நாள்களில் பார்த்துவிட்டு திரும்பி வந்தீர்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை நிரப்ப வேண்டும்.

இந்தப் படிவங்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில் வாசலில் உள்ள தகவல் உதவி மையம் ஆகிய இடங்களில் வாங்கி பூர்த்திசெய்ய வேண்டும். இந்தப் படிவம் இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஜெகந்நாத் கோயிலுக்குள் செல்ல பக்தர்களின் சுய தகவல் படிவம் கட்டாயம்

மேலும், கோயிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பாரம்பரியத்தின்படி பக்தர்களின் கண்களை அலுவலர்கள் தொடக் கூடாது என்றும், அவர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும் எனவும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோயிலுக்கு வருகைதந்த பக்தர்கள் அனைவரும் தங்களின் முகங்களை முகக்கவசம் அல்லது துணிகளைக் கொண்டு மூடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விநாயகருக்கு முகக் கவசம் - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகாராஷ்டிரா கோயில்!

ஓடிசாவில் பூரி பகுதியில் பிரபலமான ஜெகந்நாத் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில், நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசிடமிருந்து தப்பிப்பதற்குப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றன.

அந்த வகையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் ஜெகந்நாத் கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துள்ளது. அதில், கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் சுய தகவல் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும். அந்தப் படிவத்தில், தங்களின் குடும்பத்தினர் யாருக்காவது சளி, காய்ச்சல் உள்ளதா என்றும் கொரோனா பாதித்துள்ள பகுதிகளுக்கு கடந்த 15 நாள்களில் பார்த்துவிட்டு திரும்பி வந்தீர்களா உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை நிரப்ப வேண்டும்.

இந்தப் படிவங்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில் வாசலில் உள்ள தகவல் உதவி மையம் ஆகிய இடங்களில் வாங்கி பூர்த்திசெய்ய வேண்டும். இந்தப் படிவம் இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஜெகந்நாத் கோயிலுக்குள் செல்ல பக்தர்களின் சுய தகவல் படிவம் கட்டாயம்

மேலும், கோயிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பாரம்பரியத்தின்படி பக்தர்களின் கண்களை அலுவலர்கள் தொடக் கூடாது என்றும், அவர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும் எனவும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோயிலுக்கு வருகைதந்த பக்தர்கள் அனைவரும் தங்களின் முகங்களை முகக்கவசம் அல்லது துணிகளைக் கொண்டு மூடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விநாயகருக்கு முகக் கவசம் - விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகாராஷ்டிரா கோயில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.