ETV Bharat / bharat

விகாஸ் துபே என்கவுன்ட்டர்: விசாரணை குழுவில் அதிரடி மாற்றம்?

author img

By

Published : Aug 11, 2020, 5:03 PM IST

டெல்லி: விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கின் விசாரணை குழுவில் நீதிபதி சவுகானை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபே, கடந்த ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, துபே மற்றும் அவரின் கூட்டாளிகளின் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கின் விசாரணை குழுவில் நீதிபதி சவுகானை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கன்ஷ்யம் உபாத்யாய் என்பவர் மனு தாக்கல் செய்தார். சவுகானின் சகோதரர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார், அவரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது. மேலும், நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்படியான ஆலோசனைகளை மனுதாரரிடம் கேட்டுள்ளது.

இதுகுறித்து பாப்டே, "கன்ஷ்யமின் மனுவை அடிப்படையாக கொண்டு முன்னாள் நீதிபதியை சந்தேகிக்க முடியாது. விசாரணைக் குழுவில் வேறு எந்த உறவினராவது இடம்பெற்றுள்ளார்களா? நீதிபதிகளின் உறவினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் காரணத்தால் விசாரணை நியாயமாக இருக்காதா? நீதிபதிகள் அனைவரும் நடுநிலைமை இன்றி செயல்படுகிறார்கள் என சொல்கிறீர்களா? அரசியல் கட்சியில் இருப்பது சட்ட விரோதமானதா? " என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சிக் கதை!

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலை செய்த வழக்கு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபே, கடந்த ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, துபே மற்றும் அவரின் கூட்டாளிகளின் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கின் விசாரணை குழுவில் நீதிபதி சவுகானை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கன்ஷ்யம் உபாத்யாய் என்பவர் மனு தாக்கல் செய்தார். சவுகானின் சகோதரர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார், அவரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது. மேலும், நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்படியான ஆலோசனைகளை மனுதாரரிடம் கேட்டுள்ளது.

இதுகுறித்து பாப்டே, "கன்ஷ்யமின் மனுவை அடிப்படையாக கொண்டு முன்னாள் நீதிபதியை சந்தேகிக்க முடியாது. விசாரணைக் குழுவில் வேறு எந்த உறவினராவது இடம்பெற்றுள்ளார்களா? நீதிபதிகளின் உறவினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் காரணத்தால் விசாரணை நியாயமாக இருக்காதா? நீதிபதிகள் அனைவரும் நடுநிலைமை இன்றி செயல்படுகிறார்கள் என சொல்கிறீர்களா? அரசியல் கட்சியில் இருப்பது சட்ட விரோதமானதா? " என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சிக் கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.