ETV Bharat / bharat

விரைவில் வருகிறது கடற்படையில் பெண்களுக்கான ஆணையம்!

author img

By

Published : Mar 18, 2020, 2:46 PM IST

டெல்லி: கடற்படையில் பெண் அலுவலர்களுக்கான ஆணையத்தை அமைக்கும் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC
SC

இந்திய ராணுவத்தில் ஆண்களைப்போல அல்லாமல் பெண்களுக்கு மிகக் குறைந்த காலமே பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் பணி உயர்வு, ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் சிக்கல்கள் எழுகின்றன.

இது குறித்த விஷயங்களை நிர்வகிக்க கடற்படையில் பெண்களுக்காகத் தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சில பெண் உயர் அலுவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி, டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நாட்டுக்காகச் சேவைபுரியும் பெண்களுக்கு என நிரந்தர ஆணையம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவது கவலையளிக்கிறது.

ராணுவத்தில் பெண்கள் நுழைய இருந்த சட்டரீதியிலான தடைகள் நீக்கப்பட்ட பின்னரும், பெண்களுக்கென நிரந்தர ஆணையம் அமைப்பதில் பாகுபாடு காட்டக்கூடாது. ராணுவத்தில் ஆண்களைப் போலவே பெண்களையும் சமமாக மதிக்க வேண்டும்.

பெண் அலுவலர்களுக்கு எனக் கடற்படையில் நிரந்தர ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான பணிகளை மூன்று மாதங்களுக்குள் அரசு முடிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் கடற்படையிலுள்ள நூற்றுக்கணக்கான பெண் அலுவலர்கள் பயண்பெறுவர் என்று பெண் அலுவலர்கள் சார்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் ஐஸ்வர்யா பாட்டி தெரிவித்தார்.

ஓய்வூதிய சலுகைகளுடன் சேர்த்து தளபதி சுமிதா பலூனி, தளபதி பிரசன்னா உள்ளிட்ட ஆறு கடற்படை அலுவலர்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவால் ஒரு மாதம் போராட்டங்கள் ரத்து'

இந்திய ராணுவத்தில் ஆண்களைப்போல அல்லாமல் பெண்களுக்கு மிகக் குறைந்த காலமே பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் பணி உயர்வு, ஓய்வுக்குப் பிந்தைய பலன்கள் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் சிக்கல்கள் எழுகின்றன.

இது குறித்த விஷயங்களை நிர்வகிக்க கடற்படையில் பெண்களுக்காகத் தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று சில பெண் உயர் அலுவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி, டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நாட்டுக்காகச் சேவைபுரியும் பெண்களுக்கு என நிரந்தர ஆணையம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவது கவலையளிக்கிறது.

ராணுவத்தில் பெண்கள் நுழைய இருந்த சட்டரீதியிலான தடைகள் நீக்கப்பட்ட பின்னரும், பெண்களுக்கென நிரந்தர ஆணையம் அமைப்பதில் பாகுபாடு காட்டக்கூடாது. ராணுவத்தில் ஆண்களைப் போலவே பெண்களையும் சமமாக மதிக்க வேண்டும்.

பெண் அலுவலர்களுக்கு எனக் கடற்படையில் நிரந்தர ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்கான பணிகளை மூன்று மாதங்களுக்குள் அரசு முடிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் கடற்படையிலுள்ள நூற்றுக்கணக்கான பெண் அலுவலர்கள் பயண்பெறுவர் என்று பெண் அலுவலர்கள் சார்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் ஐஸ்வர்யா பாட்டி தெரிவித்தார்.

ஓய்வூதிய சலுகைகளுடன் சேர்த்து தளபதி சுமிதா பலூனி, தளபதி பிரசன்னா உள்ளிட்ட ஆறு கடற்படை அலுவலர்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனாவால் ஒரு மாதம் போராட்டங்கள் ரத்து'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.