ETV Bharat / bharat

டிஆர்பி முறைகேடு: ரிபப்ளிக் தலைமைச் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்!

author img

By

Published : Dec 14, 2020, 8:33 AM IST

மும்பை: டிஆர்பி முறைகேடு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அலுவலரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிபப்ளிக் சிஇஓ
ரிபப்ளிக் சிஇஓ

டிஆர்பி முறைகேடு ஊடகத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரான நிதின் தியோகர், டிஆர்பியில் முறைகேடு நடைபெறுவதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மும்பை காவல் துறையினர், டிஆர்பி முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, விளம்பர வருவாயை பெருக்கிக்கொள்ளும் நோக்கில் டிஆர்பியை அதிகரித்து முறைகேட்டில் ஈடுபடுவதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அலுவலர் விகாஷ் காஞ்சந்தனியை நேற்று (டிசம்பர் 13) மும்பை காவல் துறை கைதுசெய்தது.

ரிபப்ளிக் சிஇஓ
ரிபப்ளிக் தலைமைச் செயல் அலுவலர்

மும்பையில் உள்ள பெருநகர தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் காஞ்சந்தனி முன்னிறுத்தப்பட்டார். அப்போது, அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்த விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சந்தனியைத் தவிர, டிஆர்பி வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ரிபப்ளிக் விநியோகத் தலைவரும் உதவி துணைத் தலைவருமான கன்ஷ்யம் சிங்கை காவல் துறையினர் ஏற்கனவே கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 24 மணிநேரமும் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்பலாம்: டிச., 14 முதல் அமல்!

டிஆர்பி முறைகேடு ஊடகத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரான நிதின் தியோகர், டிஆர்பியில் முறைகேடு நடைபெறுவதாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மும்பை காவல் துறையினர், டிஆர்பி முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, விளம்பர வருவாயை பெருக்கிக்கொள்ளும் நோக்கில் டிஆர்பியை அதிகரித்து முறைகேட்டில் ஈடுபடுவதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அலுவலர் விகாஷ் காஞ்சந்தனியை நேற்று (டிசம்பர் 13) மும்பை காவல் துறை கைதுசெய்தது.

ரிபப்ளிக் சிஇஓ
ரிபப்ளிக் தலைமைச் செயல் அலுவலர்

மும்பையில் உள்ள பெருநகர தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் காஞ்சந்தனி முன்னிறுத்தப்பட்டார். அப்போது, அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்த விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சந்தனியைத் தவிர, டிஆர்பி வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ரிபப்ளிக் விநியோகத் தலைவரும் உதவி துணைத் தலைவருமான கன்ஷ்யம் சிங்கை காவல் துறையினர் ஏற்கனவே கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 24 மணிநேரமும் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்பலாம்: டிச., 14 முதல் அமல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.