தற்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. இந்த ஒப்பந்தம் யாருக்கும் பாதிப்பை, யாருக்கு சாதகத்தை ஏற்படுத்தும்? டெல்லியைச் சேர்ந்த செய்தியாளர் பூஜா மேக்ராவின் பார்வையில், சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள நேர்மறையான, எதிர்மறையான அம்சங்களைக் காணலாம்.
முதலில் எதிர்மறை காரணிகள்:
1. சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தால் (Free Trade Agreement) இந்தியா சந்திக்கப் போகும் பாதிப்புகள்
2017-18ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வு, இந்தியா கையெழுத்திட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் (எஃப்.டி.ஏ) பாதகங்களை ஆய்வு செய்தது. நிதிஆயோக்கின் இந்தியாவின் தற்போதைய எஃப்.டி.ஏ.க்களின் மதிப்பீடு அறிவுறுத்தலாக இருக்கிறது. ஒரு எஃப்.டி.ஏ.வின் சராசரி விளைவு சுமார் நான்கு ஆண்டுகளில் ஒட்டுமொத்த வர்த்தகத்தை சுமார் 50 சதவிகிதம் அதிகரிப்பதாகக் கணக்கெடுப்பு முடிவு செய்தது. ஆனால் வர்த்தக சமநிலையின் தரம் பொதுவாக இந்தியாவை மோசமாக்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது, அல்லது உபரி குறைகிறது.
ஆசியான் நாடுகள் கூட்டமைப்பு (ASEAN-Association of Southeast Asian Nations) இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பில் ஒன்றாகும். ஆசியானுடனான இந்தியா-சிங்கப்பூர் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு (India–Singapore Comprehensive Economic Cooperation) 2010 ஜனவரி 1ஆம் தேதி முதல் தொடங்கியது. அதன் பிறகு, இருதரப்பு வர்த்தகம் 2009-10இல் 43 பில்லியன் டாலர்களிலிருந்து 2018-19இல் 97 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஆனால் ஆசியானுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2009-10இல் எட்டு பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்து 2018-19இல் 22 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ஆசியானுக்கு இந்திய ஏற்றுமதியை விட ஆசியானிலிருந்து இறக்குமதி வேகமாக அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை - ஆசியான் எஃப்.டி.ஏ. (FTA), 21 துறைகளில் 13-க்கு வர்த்தக இருப்பு மோசமடைந்துள்ளது. சரிவை சந்தித்த துறைகளில் ஜவுளி, ரசாயனங்கள், காய்கறி பொருள்கள், அடிப்படை உலோகங்கள், கற்கள், நகைகள் அடங்கும். வர்த்தக உபரி துறைகளின் முன்னேற்றம் மிகவும் குறைவாக இருந்தது. அதனால் அந்த இழப்புகளை ஈடுசெய்ய முடியவில்லை.
இந்தியாவின் வர்த்தக இருப்பு மீதான பிற விருப்ப வர்த்தக ஒப்பந்தங்களின் தாக்கம் வேறுபட்டதல்ல. இந்தியா-கொரியா விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (Comprehensive Economic Partnership Agreement- CEPA) 2010 ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 12 பில்லியன் டாலரிலிருந்து 21.5 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது. ஆனால் மீண்டும், ஏற்றுமதியைவிட இறக்குமதி மிக வேகமாக வளர்ந்தது.
இதன் விளைவாக, கொரியாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, இது 2009-10இல் ஐந்து பில்லியன் டாலர்களிலிருந்து 2018-19 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தியா-ஜப்பான் CEPA 2011 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை உண்மையில் உலகின் பிற பகுதிகளுடன் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை விட வேகமாக வளர்ந்துள்ளது. 2005-06 முதல் 2018-19 வரை, இந்தியாவின் வர்த்தக உபரி நான்கு பில்லியன் டாலரிலிருந்து 21 பில்லியன் டாலராக பல மடங்கு அதிகரித்தது.
2. தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தால் (FTA) குறைவான பயன்பாடு
வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதியாளர்களைப் போலவே இந்திய ஏற்றுமதியாளர்களும் முன்னுரிமை வழிகளைப் பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். உண்மையில், எஃப்.டி.ஏக்கள் மூலம் இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தின் சதவிகிதம் மிகக் குறைவு.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கூற்றுப்படி, எஃப்.டி.ஏ.க்களின் பயன்பாட்டு விகிதம் 25 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. இது ஆசியாவில் மிகக் குறைவான ஒன்றாகும். ஏற்றுமதியாளர்கள் சாதாரண வழியைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். கடுமையான விதிகளைத் தவிர, தவறான கடமைகள், விழிப்புணர்வு இல்லாமை ஆகியவை குறிப்பிடத்தக்க கட்டுப்படுத்தும் காரணிகளாகும்.
இந்தியா-ஜப்பான் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், இரு நாடுகளும் ஆடைகளின் மீதான கட்டணங்களை விலக்கின (பூஜ்ஜியமாகக் குறைத்தன). ஆயினும்கூட ஜப்பான் இந்தியாவின் சிறந்த ஆடை ஏற்றுமதி சந்தைகளில் இல்லை.
3. உள்நாட்டு தடைகள்
இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக பரிவர்த்தனை செலவுகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களால் உலகச் சந்தையில் போட்டி போட முடியவில்லை.
நிதிஆயோக் பகுப்பாய்வின்படி, இந்தியாவில் சராசரி தளவாட செலவுகள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 15 சதவிகிதமாகவும், வளர்ந்த நாடுகளில் இத்தகைய செலவுகள் சுமார் எட்டு சதவிகிதமாகவும் உள்ளன.
4. சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை
சில வாரங்களுக்கு முன்பு வியட்நாம், சீனாவில் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் இருந்ததை விட போட்டித்தன்மையுடன் உற்பத்தி செய்யக்கூடிய ஊதுவர்த்திகள் (agarbatis) போன்ற பொருள்களின் மீதான இறக்குமதி கட்டணத்தை இந்தியா உயர்த்தியது. ஆனால் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (ஆர்.சி.இ.பி.-(RCEP)) சேர ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், ஜப்பான், தென் கொரியாவிலிருந்து சுமார் 90 சதவிகித பொருள்களுக்கும் சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலிருந்து 74 சதவிகிதத்திற்கும் அதிகமான பொருள்களின் கட்டணங்களை இந்தியா நீக்க வேண்டும்.
இரும்பு மற்றும் எஃகு, பால், கடல் பொருள்கள், மின்னணு பொருள்கள், ரசாயனங்கள், மருந்துகள், ஜவுளி உள்ளிட்ட பல தொழில்கள் ஆர்.சி.இ.பி.யின் கீழ் முன்மொழியப்பட்ட கட்டண நீக்கம் அவர்களுக்கு போட்டியற்றதாக இருக்கும் என்று கவலை தெரிவித்துள்ளன. பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததும், மலிவான சீன இறக்குமதிகள் இந்திய சந்தையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அது போலவே, சீனாவுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை கடந்த தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) பதின்மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையில் அண்டை நாடு இப்போது உள்ளது.
முதன்மை தயாரிப்புகளான தாதுக்கள், பருத்தி போன்றவற்றை ஏற்றுமதி செய்ய இந்தியா முனைகிறது. இந்தியாவுக்கான சீன ஏற்றுமதிகள் பெரும்பாலும் பலவிதமான அதிநவீன தயாரிப்புகளாகும். அவை மதிப்புச் சங்கிலியில் உயர்ந்த லாப வரம்புகளை அனுபவித்து அங்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
நேர்மறை காரணிகள்:
1. அதிக கட்டண விகிதங்களுக்கு எதிராக பூஜ்ஜிய வரி விகித கட்டணங்கள்
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) போன்ற ஆடை ஏற்றுமதிக்கான முக்கிய சந்தைகளுடன் இந்தியா பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் நுழையவில்லை. இது இந்தியாவுடன் முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகளைக் கொண்ட அதன் போட்டியாளர்களிடமிருந்து இந்தியாவை ஒரு பாதகமான நிலையில் வைக்கிறது.
இதன் விளைவாக, இந்தியாவின் ஆடை ஏற்றுமதி தேக்கமடைந்துள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில், இந்தியாவிலிருந்து ஆடை ஏற்றுமதி 3.8 விழுக்காடு குறைந்துள்ளது. இந்தியாவின் போட்டியாளரான தென் கொரியா - ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா அல்லது இருவருடனும் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.
பட்டு சால்வைகளில் இந்தியா மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. இதில் அமெரிக்கா அதிக கட்டண விகிதத்தை 11.3 சதவிகிதமாக விதிக்கிறது. அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் (FTA) கொண்ட இந்தியாவின் போட்டியாளர்கள் பூஜ்ஜிய கட்டணங்களை எதிர்கொள்கின்றனர்.
2. உலகளவில் மக்கள் தொகை அதிகரிப்பு
பாதுகாப்பு நடவடிக்கைகளின் வளர்ந்துவரும் போக்கு, அமெரிக்காவில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவிலும் அதிக கட்டணங்களின் அச்சுறுத்தல் இந்திய ஏற்றுமதியின் போட்டி விளிம்பை மேலும் அழிக்கக்கூடும். முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கைகளைக் கொண்ட இந்தியாவின் போட்டியாளர்கள் அந்த ஏற்பாடுகளின் கீழ் கட்டண உயர்வு அல்லது வர்த்தகத்திற்கு அதிகரித்த தடைகளுக்கு எதிராக இழப்பீடு கோரலாம். ஆனால் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் (எஃப்.டி.ஏ) இல்லாமல், இந்தியா அவ்வாறு செய்ய முடியாது.
3. தொழிலாளர் எழுச்சி
இந்தியாவின் ஒப்பீட்டு நன்மை அதன் திறமையான உழைப்பு மற்றும் வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணம் அனுப்புவதற்கான சாத்தியமாகும். பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (RCEP) ஒப்பந்தம் இந்தியாவின் பார்வையில் ஒரு வெற்றியாகும்.
சேவைகளில் வர்த்தகம் செய்வதற்கான திறந்த தன்மையை கணிசமாக அதிகரிக்க முன்வந்தால், பகுதிவாரியாகவும் தொழிலாளர்களின் இயக்கங்களை அதிகரிக்கலாம். அதாவது எளிதான பணி நுழைவு இசைவு (விசா) வழங்கல். இந்தியா போன்ற வளரும் நாடுகளில், புலம்பெயர்ந்தோருக்கான எதிர்ப்பு, தொழிலாளர்களின் எழுச்சியை காட்டுகிறது.
இதையும் படிக்கலாம்: 'இதுவே சரியான தருணம், இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி!