ETV Bharat / bharat

மாவோயிஸ்டு தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

author img

By

Published : May 1, 2019, 5:40 PM IST

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு ராஜநாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங்

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில், பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசினர். இந்த தாக்குதலில் 15 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் அவர்கள் விரக்தியில் இருக்கும் உச்சத்தை காட்டுகிறது. தங்கள் உயிர்களை தாய்நாட்டுக்காக தியாகம் செய்த பாதுகாப்பு படையினரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர்களின் குடும்பத்திற்கு என் வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸிடம் உரையாடினேன். அவர்களுக்கு எவ்விதமான உதவியை செய்ய தயாராக உள்ளோம்" என்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில், பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசினர். இந்த தாக்குதலில் 15 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் அவர்கள் விரக்தியில் இருக்கும் உச்சத்தை காட்டுகிறது. தங்கள் உயிர்களை தாய்நாட்டுக்காக தியாகம் செய்த பாதுகாப்பு படையினரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர்களின் குடும்பத்திற்கு என் வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸிடம் உரையாடினேன். அவர்களுக்கு எவ்விதமான உதவியை செய்ய தயாராக உள்ளோம்" என்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.