ராஜஸ்தான் மாநில சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜலூர் மாவட்டத்தின் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மூன்று முகாம்களையும் அமைத்துள்ளது.
தூங்ரி, பந்தாகுவா, பெரி ஆகிய மூன்று இடங்களும் வெட்டுக்கிளிகளால் அதிகம் சேதமடைந்துள்ளன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வேளாண் துறை இயக்குநர் புலராம் மேக்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வெட்டுக்கிளித் தாக்குதல் குறித்த செய்தியை அறிந்த வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷுக்ரம் பிஷ்நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வெட்டுக்கிளிகளின் தாக்குதலை சமாளிக்க கிராம மக்கள் பல்வேறு வழிகளை மேற்கொண்டனர். சிலர் நெருப்பு மூட்டியும், புகை மூட்டியும் வெட்டுக்கிளிகளை துரத்த முயற்சி செய்துள்ளனர். சிலர் பயிர்களின் மேல் துணிகளை போர்த்தியுள்ளனர். ஆனால், அனைத்து முயற்சியும் விழலுக்கு இறைத்த நீராகியுள்ளன.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு