ETV Bharat / bharat

பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றப்பட்ட சம்பவம்.. பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்ட நாராயணசாமி!

author img

By

Published : Dec 25, 2019, 5:03 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ட்வீட்  தங்கப்பதக்கத்தை புறக்கணித்த மாணவி ரபியா  புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா  நாராயணசாமி ட்வீட்டர் பதிவு
பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை புறக்கணித்த மாணவி

கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த ரபிஹா, புதுச்சேரி பல்கலைக்கழக்கத்தில் மக்கள் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் மற்றும் பட்டத்தை பெறுவதற்காக அவர் கடந்த 23ஆம் தேதி நடந்த புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்தார்.

அவ்விழாவில் கலந்துகொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்வதற்காக வரும் போது மாணவி ரபிஹா காரணமின்றி காவலர்களால் நிகழ்வு நடந்த அரங்கத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சி நிறைவடைந்து ஜனாதிபதி சென்ற பிறகே அவர் நிகழ்வு நடந்த அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் விழாமேடைக்குச் சென்ற அவர், சான்றிதழை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கப்பதக்கம் வாங்குவதை புறக்கணித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நான் பர்தா அணிந்து இருந்ததால்தான் அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டேன் என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.

பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை புறக்கணித்த மாணவி

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ட்வீட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், புதுவைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹாவை அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. நான் அந்த விழாவில் கலந்துகொண்டிருந்தாலும் அச்சம்பவம் குறித்து நான் அறிந்திருக்கவில்லை.

புதுச்சேரி முதலமைச்சர் ட்வீட்  தங்கப்பதக்கத்தை புறக்கணித்த மாணவி ரபியா  புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா  நாராயணசாமி ட்வீட்டர் பதிவு
தங்கப்பதக்கத்தை மாணவி புறக்கணித்த சம்பவம்: அறிக்கை கேட்ட முதலமைச்சர் நாராயணசாமி

கருத்து வேறுபாடு என்பது ஜனநாயகத்தின் சாராம்சம். இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: பொதுமக்களுக்கு சீப்பால் தலைவாரிவிட்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்!

கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த ரபிஹா, புதுச்சேரி பல்கலைக்கழக்கத்தில் மக்கள் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் மற்றும் பட்டத்தை பெறுவதற்காக அவர் கடந்த 23ஆம் தேதி நடந்த புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்தார்.

அவ்விழாவில் கலந்துகொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்வதற்காக வரும் போது மாணவி ரபிஹா காரணமின்றி காவலர்களால் நிகழ்வு நடந்த அரங்கத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சி நிறைவடைந்து ஜனாதிபதி சென்ற பிறகே அவர் நிகழ்வு நடந்த அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் விழாமேடைக்குச் சென்ற அவர், சான்றிதழை மட்டும் பெற்றுக்கொண்டு தங்கப்பதக்கம் வாங்குவதை புறக்கணித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நான் பர்தா அணிந்து இருந்ததால்தான் அரங்கைவிட்டு வெளியேற்றப்பட்டேன் என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.

பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை புறக்கணித்த மாணவி

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ட்வீட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், புதுவைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹாவை அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. நான் அந்த விழாவில் கலந்துகொண்டிருந்தாலும் அச்சம்பவம் குறித்து நான் அறிந்திருக்கவில்லை.

புதுச்சேரி முதலமைச்சர் ட்வீட்  தங்கப்பதக்கத்தை புறக்கணித்த மாணவி ரபியா  புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா  நாராயணசாமி ட்வீட்டர் பதிவு
தங்கப்பதக்கத்தை மாணவி புறக்கணித்த சம்பவம்: அறிக்கை கேட்ட முதலமைச்சர் நாராயணசாமி

கருத்து வேறுபாடு என்பது ஜனநாயகத்தின் சாராம்சம். இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: பொதுமக்களுக்கு சீப்பால் தலைவாரிவிட்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்!

Intro:புதுவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திரும்ப அளித்த சம்பவம் இது தொடர்பாக பல்கலைக்கழகம் நிர்வாகதிடம் முதல்வர் நாராயணசாமி அறிக்கை கேட்டு ள்ளார்.டுவிட்டரில் தெரிவித்துள்ளாBody:புதுவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திரும்ப அளித்த சம்பவம் இது தொடர்பாக பல்கலைக்கழகம் நிர்வாகதிடம் முதல்வர் நாராயணசாமி அறிக்கை கேட்டு ள்ளார்.டுவிட்டரில் தெரிவித்துள்ளா

கேரள மாநிலம் கோழக்கோடு நகரத்தை சேர்ந்தவர் ரபஹ, இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 23 ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தங்க பதக்கம் பெற இருந்தார். இதற்காக அவர் பல்கலைக்கழக நேரு ஆடிட்டோரியத்தில் அமரப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி வருவதற்கு முன்னதாக அவர் போலிசாரால் காரணமின்றி வெளியே அனழத்து செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார். இதனை அடுத்து ஜனாதிபதி வந்து சென்ற பின்னரே குறிப்பிட்ட மானவி நிகழ்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவர் மேடையில் ஏறி சான்றிதழ் மட்டும் பெற்றுக்கொண்டு, தங்க பதக்கத்தை வாங்குவதை தவிர்த்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நான் பர்தா அனிந்து இருந்த்தால்தான் அரங்கைவிட்டு வெளியேற்றபட்டனே என்றும் அவர் ஆதங்கப்பட்டார்..

இச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதில்

புதுவைப்பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபீஹாவை அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. நான் கலந்துகொண்டிருந்தாலும் நான் அதை அறிந்திருக்கவில்லை. கருத்து வேறுபாடு உரிமை ஜனநாயகத்தின் சாராம்சம்.இது தொடர்பாக பல்கலைகழக துணைவேந்தரிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளேன் என முதல்வர் நாராயணசாமி டிவிட்டரில் பதிவுவிட்டுள்ளார்.

File shotsConclusion:புதுவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திரும்ப அளித்த சம்பவம் இது தொடர்பாக பல்கலைக்கழகம் நிர்வாகதிடம் முதல்வர் நாராயணசாமி அறிக்கை கேட்டு ள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.