ETV Bharat / bharat

புதுவையில் இன்று 64 பேர்களுக்கு கரோனா உறுதி!

author img

By

Published : Jul 11, 2020, 6:30 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 64 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 336ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

pondicherry corona
pondicherry corona

புதுச்சேரி: மாநிலத்தில் கரோனா தொற்று ஆயிரத்து 336ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று சில நாள்களாக அதிகரித்துவருகிறது. நேற்று வரை கரோனா தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்து 336ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 64 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று ஒரே நாளில் புதுச்சேரியில் 48 நபர்களுக்கும், காரைக்காலில் 10 நபர்களுக்கும், ஏனாம் பகுதியில் 5 நபர்களுக்கும், மாஹே பகுதியில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 389 பேர், கோரிமேடு பகுதியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 101 பேர், கரோனா சிறப்பு மருத்துவமனையில் 62 பேர், காரைக்காலில் 43 பேர் என 629 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் 48 பேர் குணமடைந்ததால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 485 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 282 பேருக்கு சோதனை முடிவுகள் வெளிவரவேண்டிவுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: மாநிலத்தில் கரோனா தொற்று ஆயிரத்து 336ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று சில நாள்களாக அதிகரித்துவருகிறது. நேற்று வரை கரோனா தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்து 336ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 64 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று ஒரே நாளில் புதுச்சேரியில் 48 நபர்களுக்கும், காரைக்காலில் 10 நபர்களுக்கும், ஏனாம் பகுதியில் 5 நபர்களுக்கும், மாஹே பகுதியில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 389 பேர், கோரிமேடு பகுதியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 101 பேர், கரோனா சிறப்பு மருத்துவமனையில் 62 பேர், காரைக்காலில் 43 பேர் என 629 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் 48 பேர் குணமடைந்ததால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 485 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 282 பேருக்கு சோதனை முடிவுகள் வெளிவரவேண்டிவுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.