ETV Bharat / bharat

'சீன ஊடுருவலை பிரதமர் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்' - கபில் சிபல்

author img

By

Published : Jun 28, 2020, 2:28 PM IST

டெல்லி: இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவியதை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

pm-should-condemn-china-publicly-for-incursions-take-strong-quick-action-cong
pm-should-condemn-china-publicly-for-incursions-take-strong-quick-action-cong

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் பேசுகையில், ''சீனாவின் ஊடுருவலை பிரதமர் மோடி வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். அவர் வெளிப்படையாகப் பேசினால், இந்த விவகாரத்தைல் அவருக்கு ஆதரவாக இருப்போம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் யாரும் ஊடுருவவில்லை, இந்திய எல்லைகளை யாரும் ஆக்கிரமிக்கவில்ல என்று அவர் கூறினார். இதனைத்தான் சீனாவும் கூறிவருகிறது. ஆனால் சாட்டிலைட் புகைப்படங்கள் அப்படி இல்லை.

பிரதமர் பேசும்போது எவ்வித கேள்விகளும் எழக்கூடாது. ஆனால், அவரின் பேச்சுக்கும் கள நிலவரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. இந்தியாவின் எல்லையை அவரால் பாதுகாக்க முடியவில்லை என மக்கள் நினைத்துவிடுவார்கள் என்பதால்தான் அவர் அவ்வாறு பேசியுள்ளார்'' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' - சீத்தாராம் யெச்சூரி

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் பேசுகையில், ''சீனாவின் ஊடுருவலை பிரதமர் மோடி வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். அவர் வெளிப்படையாகப் பேசினால், இந்த விவகாரத்தைல் அவருக்கு ஆதரவாக இருப்போம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் யாரும் ஊடுருவவில்லை, இந்திய எல்லைகளை யாரும் ஆக்கிரமிக்கவில்ல என்று அவர் கூறினார். இதனைத்தான் சீனாவும் கூறிவருகிறது. ஆனால் சாட்டிலைட் புகைப்படங்கள் அப்படி இல்லை.

பிரதமர் பேசும்போது எவ்வித கேள்விகளும் எழக்கூடாது. ஆனால், அவரின் பேச்சுக்கும் கள நிலவரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. இந்தியாவின் எல்லையை அவரால் பாதுகாக்க முடியவில்லை என மக்கள் நினைத்துவிடுவார்கள் என்பதால்தான் அவர் அவ்வாறு பேசியுள்ளார்'' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' - சீத்தாராம் யெச்சூரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.