ETV Bharat / bharat

’பகுதி ஒப்பந்தம் சாத்தியம் இல்லை - இந்திய-அமெரிக்க உறவில் வர்த்தகம் வரையறுக்கப்படவில்லை’

author img

By

Published : Feb 24, 2020, 6:53 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகைக்கு முன்பாக, மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா, கார்னகி இந்தியா இயக்குனர் ருத்ரா சவுத்ரியுடன், டிரம்ப் வருகையையொட்டி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள், இந்திய-அமெரிக்க தரப்பில் உள்ள உறவில் சவால்கள் குறித்து பேசினார்.

Partial deal unlikely, but trade does not define Indo-US ties: Expert
Partial deal unlikely, but trade does not define Indo-US ties: Expert

டெல்லி; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை தந்துள்ள நிலையில், இருதரப்பிலும், சில அதிமுக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம். பல மாதங்களாக சிக்கலில் இருக்கும் பகுதி வணிக ஒப்பந்தத்துக்கும் சாத்தியம் இருக்கிறது. எனினும், இந்த இருதரப்பு உறவில் வர்த்தகம் ஒரு வரையறுக்கப்பட்ட கூறாக கருதப்படாது என்கிறார் கார்னகி இந்தியா எனும் உலகளாவிய சிந்தனைக்குழுவின் முன்னணி இயக்குனர் ருத்ரா சவுத்ரி,

அறிஞர், எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர் சவுத்ரி, வர்த்தகம் ஒப்பந்தம் இன்னும் சாத்தியமில்லை என்று கருதுகிறார். பிரதமர் மோடி, வர்த்தக பிரதிநிதி லைட்ஹைசர் உடன் கடுமையான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டி இருக்கலாம் மற்றும் டிரம்ப் இடம் நேரடியாகவும் வேண்டுகோள் வைக்கலாம் என்று தெரிகிறது.

மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா, ருத்ரா சவுத்ரியுடன், இருநாட்டு உறவில் உள்ள சவால்கள், இந்த வருகையினால் உள்ள எதிர்பார்ப்புகள், இந்தியாவானது ரஷ்யா மற்றும் ஈரானுடன் இறுக்கமான சூழலில் இருப்பது, காஷ்மீர், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவிவகாரங்களில் சிக்கல்களை சமாளிப்பது, அதே போல சீனா தொடர்பாக இந்தோ-பசிபிக் கொள்கையில் சிக்கல்கள் ஆகியவை குறித்துப் பேசினார்.

கேள்வி; டெல்லி முதல் வாஷிங்டன் வரை, நீங்கள் நிறைய சந்திப்புகளை மேற்கொள்கின்றீர்கள். டிரம்ப் வருகையில் இருந்து இந்த குறிப்பிடத்தக்க பயணத்தில் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்; இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் எந்த ஒரு பயணம் மேற்கொண்டாலும் அதன் தன்மையில் அது முக்கியநிகழ்வாகவே இருக்கிறது. டெல்லியிலும், அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் பெரும் பொதுக்கூட்டத்திலும் என இரண்டு நாட்களை செலவிடுவதற்காகத்தான் அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிறார் என்பதுதான் உண்மை. இது ஒட்டு மொத்த உறவுக்கு ஊக்கமளிக்கிறது. ஒவ்வொரு உறவும், குறிப்பாக அமெரிக்க உடனான உறவில், அவ்வப்போது முக்கியத்துவத்தில் முதலாவதாக நினைவுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்தியா உடன் கவனம் செலுத்துதல் என்பது அமெரிக்காவுக்கு நல்ல நேரமாகும். டிரம்ப் கீழிறங்கி வந்து அந்த நெருங்கத்தை அளிக்க வேண்டும்.

கேள்வி; சிலமாதங்களில் டிரம்ப் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். பதவி முடியப்போகும் கடைசி சிலமாதங்களில் கடந்த கால அதிபர்களைப் போல தோல்வியுற்ற நபராக மாறிவிடாமல் டிரம்ப் வலுவான சிறந்த இடத்தில் இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

பதில்; அவர், உங்களின் வழக்கமான அமெரிக்க அதிபர் அல்ல. அவர், வலுவான சிறந்த இடத்தில் இருக்கிறாரா? அவர் நல்ல போட்டியை முன்வைத்தால், அந்த இடம் இருக்கும். தமக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பிறகான தருணத்தில் முக்கியமான நேரத்தில் அவர் இந்தியாவுக்கு வருகிறார். அவருக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் விசாரணையைப் பொறுத்தவரை, இந்தியாவில் பெரும் அளவுக்கு ஊடகங்கள் அதனை பெரிதாக கவனம் செலுத்தவில்லை. செனட் சபை, அவரது மகிழ்ச்சியை அனுபவிக்க அனுமதிக்கும் என்ற அனுமானம் இருப்பதாகத் தோன்றியது. எனவே, அதுசரியாக இருக்கும். இதில் உண்மை என்னவென்றால், ஒரு அதிபராக கண்டன தீர்மானத்தின் மீதான விசாரணையை எதிர்கொண்ட நிலையில், சர்வதேச வரலாற்றில் ஒரு பெரிய விஷயமாகும். கண்டனத்தீர்மானத்துக்குப் பின்னர் அதே மாதத்தில் இந்தியாவுக்கு வருவதற்கான விருப்பம் என்பது தன்னில் அது சுவாரஸ்யமானதாகும். தவிர, டிரம்ப் தமது சொந்த வழியில் இந்த உறவை பாதுகாக்கிறார் என்பதையும், இந்தியாவில் மிகவும் முக்கியமாக, பிரதமர் நரேந்திரமோடி தமது சொந்த வழியில் தம்மை கவனித்துக் கொள்கிறார் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

கேள்வி; பிரதமர் மோடியைபோல மிமிக்ரி செய்ய அவர் முயற்சித்திருக்கிறார் அல்லது கடந்த காலங்களில் ஹார்லீசை பற்றி தொடர்ச்சியான கருத்துகளை சொல்லி இருக்கிறார். இந்த விமர்சனங்கள் டெல்லியை சங்கடப்படுத்தி உள்ளன. யார் டிரம்ப் என்பதற்கான ஒரு பகுதியாக மற்றும் முழுமையாக இது இருக்கிறதா? இவையெல்லாம் விளிம்பு பிரச்னைகள் என்று புறக்கணிப்பது இந்தியாவுக்கு சிறந்ததா?

பதில்; வர்த்தக பகுதியைப் பொறுத்தவரை இது ஒரு விளிம்பு விஷயம் அல்ல. இது ஒரு முக்கியமான விஷயம். நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த உறவின் பெரிய திறன் வாய்ந்த அம்சத்துக்கு மேலாக முக்கியத்துவம் ஏதும் இல்லை. ஆகவே, வர்த்தக பகுதியில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அமெரிக்க முறைக்கு மட்டும் அதிர்ச்சியளிப்பதாக இல்லை. உலகின் பிறபகுதிகளைப் போலவே நிச்சயமாக இந்தியாவின் முறைக்கும் அதிர்ச்சிதான். உண்மை என்னவெனில், வர்த்தக விஷயத்தில், தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலானவற்றை பின்பற்றுகிறார். எந்த நாடுகளில் எது அவசியம் அவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக அவர் நம்பியதன் அடிப்படையில் இது இந்தியாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அது அலுமினியமாக , இரும்பாக, ஜிஎஸ்பி(விருப்பங்களின் பொதுவான அமைப்பு)-யாகவோ, இவையெல்லாம் ஒரு வழியில் அல்லது இதர வழியில் இந்தியாவை அடையலாம். வர்த்தக முன்னணியில் இந்த பதற்றம் இருக்கிறது. இந்த பெரிய உறவில், வர்த்தகம் ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு கூறாக மாற்றுவதற்கு சிறிதளவு மனோவசியத்தில் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடைய ஒரு அதிபர் இந்தியா வருகிறார். இருதரப்பிலும் 18 மாதங்களாக நிறைய வாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகும், ஒரு சிறிய வர்த்தக ஒப்பந்ததுக்குக் கூட சாத்தியம் உங்களுக்கு இல்லை என்பதுதான் இதில் உண்மை. டிரம்ப் உடன் அதற்கான தொடர்பு குறைவாக இருக்கலாம். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசருடன் அதிகமாக இருக்கலாம். இந்த சிக்கல்களுடன் அது வரும்பொழுது, ஒரு வலிமையான எதிர்ப்பாளராக இருக்க வேண்டும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

கேள்வி; வர்த்தகத்தில், டிரம்ப் உட்பட வாஷிங்டன் ஏதாவது கடினமாக செய்கிறது. அந்த முழுமையான அழுத்ததால், வர்த்தகப்பற்றாக்குறையை குறைக்க, எண்ணைய் மற்றும் எரிவாயு கொள்முதல் வழியே புதுடெல்லி முயற்சிக்கிறது, அமெரிக்காவில் இருந்து ராணுவ கருவிகள், ஈரானில் இருந்து எண்ணைய் கொள்முதலை மறுபரிசீலனை செய்கிறது. இன்றைக்கு வர்த்தக உறவில், எப்படி பெரிய உராய்வு இருக்கிறது? தொழில்களில் இருந்தான ஒப்பந்தத்தில் என்ன ஒதுக்கீடுகள்?

பதில்; வர்த்தக ஒப்பந்தம், நிறைய செய்ய உள்ளது. ஒரு தனிநபரான ராபர்ட் லைட்ஹைசர், கடந்த 30 ஆண்டுகளாக சொந்த கருத்துகளைக் கொண்டிருக்கிறார். அது அனுமதிகளாக அல்லது 1980 காலகட்டத்தின் பின்னால் அல்லது 90 களின் காலகட்டத்தின் பின்னாலான செமி கண்டக்டர்களுக்கான கட்டணங்களாக இருக்கிறது. இது அனுமதிகளாக அல்லது கட்டணங்களாக இப்போது ஒட்டுமொத்த வகையிலான விஷயங்களாக, இருக்கிறது., அலுமினியம், இரும்பு, விவசாயம் அல்லது பல்வேறு பொருட்களில் அதன் வழியே அங்கே பொதுவான பாற்றாக்குறை இருப்பதாக அமெரிக்கா உணர்கிறது. இந்திய தரப்பில் இருந்து, உறவு முறையில் ஒரு பெரிய கருத்தை நாம் மேற்கொண்டிருக்கின்றோம் என்பதுதான் என்னுடைய உணர்வாக இருக்கிறது. உதாரணத்துக்கு உறவினை நீங்கள் வர்த்தகம் மற்றும் திறன் அல்லது வர்த்தகம் மற்றும் ராணுவ பாதுகாப்பு என்று நீங்கள் பிரித்துப் பார்த்தால், இந்திய-அமெரிக்க உறவில் ராணுவபாதுகாப்பு உண்மையில் நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் அமெரிக்க-இந்திய உறவுமுறை பற்றி பேசும்போதெல்லாம் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம் போன்ற கணிசமாக உயர்ந்த முடிவுகளை நாம் பார்க்கின்றோம். எந்த ஒரு அமைப்பிலும் அல்லது வடிவிலும் அமெரிக்கா-இந்தியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் நடைபெறப் போவதில்லை. எனவே இந்த வருகையின் விளைவு குறித்த எதிர்பார்ப்புகளை நாம் குறைக்க வேண்டும். இந்த வருகை , இருதரப்பு உறவில் பெரிய சமநிலை நம்பிக்கை என்ற சாரம்சத்தைக் கொண்டதாகும். எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தமும் இருக்காது என்பது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வருகையின் முக்கியத்துவத்தில் இருந்து அது எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. பாதுகாப்பு தரப்பைப் பொறுத்தவரை, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இணக்கமான ஆராய்ச்சி & வளர்ச்சி மையங்களை அமைப்பது குறித்த ஒரு பேச்சுவார்த்தை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைச் சுற்றியுள்ள புதிய நிகழ்வுகளை நீங்கள் காணலாம்.

கேள்வி; விநியோகப் பரிமாற்ற ஒப்பந்தம் போன்றவை கையெழுத்தானதில், அடிப்படைப் பகுதிகளை அமல்படுத்துவதற்கான நிலைப்பாடு எங்கே இருக்கிறது?

பதில்; இது ஒரு மெதுவான செயல்பாடு. பாதுகாப்பு என்பது ஒத்திசைவு பற்றியதாகும். 2005-ம் ஆண்டுக்குப் பின்னால், அப்போதைய அரசாங்கங்கள் முக்கியமான ஒரு முயற்சி எடுக்கப்பட்டபோது, இருதரப்பு உறவின் உத்தியில் அடுத்தகட்டமாக இருந்தது. இவை எல்லாமே ஒத்திசைவு குறித்த சட்டங்கள், கொள்கைகள், தரநிலைகளைக் கொண்டி ருக்கின்றன. இதனால் அமெரிக்கா-இந்தியாவானது ஒரு வலுவான திறன்வாய்ந்த உறவை பயன்படுத்தலாம் மற்றும் ஆராயலாம். விநியோகப் பரிமாற்ற ஒப்பந்தம் என்று வரும்போது, இன்னும் கேள்விகள் எழுப்பபட வேண்டி இருக்கிறது. இன்னொரு புறம், இந்த உறவில் பாதுகாப்பு தொழில்நுட்பம், வர்த்தக முயற்சிகளுக்கான செயல்பாட்டை நீங்கள் பார்க்கலாம். இதில் நீங்கள் பெரும் அளவிலான வளர்ச்சியை பார்க்கலாம். இருதரப்பிலும், நிலையான இயக்க நடைமுறைகளில் அடிப்படையில் பொதுவான புரிதலுக்கு வந்திருக்கின்றனர். எனவே, பாதுகாப்பு என்பது மெதுவான செயல்பாடாக இருக்கிறது. ஆனால், நாம் சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு வெளிச்சத்தை பார்க்கத் தொடங்கி இருக்கின்றோம்.

கேள்வி; ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்த விஷயத்தில், பொருளாதாரத்தடைகள் மூலம் எதிரிகளை எதிர்கொள்வது என்ற அமெரிக்காவின் நிழல் இன்னும் பெரிதாக இருக்கிறதா? இந்த பேச்சுவார்த்தையில் அதுவும் இடம்பெறுமா?

பதில்; அது ரஷ்யாவாக இருந்தாலும், எண்ணைய் அல்லது ஈரானாக இருந்தாலும் இவையெல்லாம் எப்போதுமே விஷயங்களாக இருக்கின்றன. அதனை சுற்றி இந்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. இது இந்திய தரப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியாக இதை யாராவது எடுத்துக் கொள்வார்கள் என்று நான் கருதவில்லை. அமெரிக்கா உடனான, ஒப்பந்தத்தில் இன்றைக்கு உயர்ந்த பட்சமான முதிர்வை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் கருதுகின்றேன். ஒரு நாடு என்ற வகையில் பொருளாதாரத்தடைகள் மூலம் எதிரிகளை எதிர்கொள்வது என்ற அமெரிக்காவை சமாளித்து ஒரு வழியாக வெளியே வந்து விட்டோம். ஈரானுக்கான பொருளாதாரத் தடைகளில் , உண்மையில் கச்சா எண்ணை விலை எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை சமாளித்து ஈரான், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டிருக்கின்றோம். இது சமகால சிக்கல்களை கையாளுவதற்கான கேள்வி மட்டுமல்ல. இன்னதென்று சொல்ல முடியாத அமெரிக்காவின் அணுகுமுறைகளை எதிர்கொள்வதில், வரலாற்று ரீதியாக சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆகவே, ஏற்கனவே இருந்ததை விடவும், மேலும் அதிக கணிக்க முடியாத தாக இந்த சூழல், இருக்கும். ஆனால், என்னுடைய உணர்வில், இந்திய தரப்பின் அணுகுமுறையைப் பார்க்கும்போது, டிரம்ப் இடம் இருந்து முடிந்ததைப் பெற, தந்திரமான சிக்கல்களைச் சுற்றி கவனமாக அது காய்நகர்த்தப்போகிறது.

கேள்வி; டோக்லாம் பிரச்னைக்குப் பின்னர், அமெரிக்காவின் நிலை எதிர்பார்த்தபடி இல்லாததால், சீனா, ரஷ்யா உடனா உறவுகளுக்கு இந்தியா புத்துயிரூட்டியதை நாம் பார்த்தோம். ஆஃப்கானிஸ்தானின் அமைதித்திட்டத்தை மனதில் வைத்து, டிரம்ப் பாகிஸ்தானை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையை சமாளிக்க இந்தியாவுக்கு கூடுதல் திறன் தேவைப்படுகிறதா?

பதில்; இது டோக்லாமுககு வந்தபோது, சில ஆபத்துகளுககு தம்மை வெளிப்படுத்துவதாக நாம் எதிர்பார்த்தபடி அமெரிக்கர்கள் இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. அந்த நேரத்தில் வெளியுறவுத்துறை அல்லது வெள்ளை மாளிகை வெளியிட்ட பெரும்பாலான அறிக்கைகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்தியாவைப் பொறுத்தவரை அவை நியாயமானது என்று கூறி இருக்கின்றன. கடைசியாக‍ அதில், 2017-ம் ஆண்டின் நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

சீனாவுடன் நீங்கள் ஒரு பதற்றமான சூழலில் இருக்கும்போது, உங்களிடம் உள்ள நூற்றுக்கணக்கனக்கான இந்திய வீரர்கள் விரோதம் மற்றும் அவநம்பிக்கையோடு இருப்பார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் சீன-பூட்டான் பகுதியில் இதை எதிர்கொள்வார்கள். தேவையற்ற வகையில் அமெரிக்கா குறுக்கிட்டு, அந்த சிக்கலை அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை. டோக்லாம் பிரச்னை, இந்திய-அமெரிக்க உறவை பாதிக்கும் என்று நான் கருதவில்லை. இரண்டாவதாக, இது பாகிஸ்தான் என்று வரும்போது, சர்வதேச தலைவர்களிடம் டிரம்ப் தமது சொந்த வழியை கொண்டிருக்கிறார்.இம்ரான்கான் வாஷிங்க்டன்னுக்கு வெளியே பயணித்தபோது, இரண்டு ராக் இசை நட்சத்திரங்கள் ஒருவருக்கு ஒருவர் நேரத்தை செலவிடுதுபோல இருந்தது. ஒருவருக்கு ஒருவர் ஈர்த்துக் கொண்டனர். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான பெரிய கட்டமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. தீவிரவாதத்தில் அழுத்தம் இருக்கிறது. அண்மையில் கூட நிதிநடவடிக்கை பணிக்குழுவிலிருந்து பாகிஸ்தான் அழுத்த த்தை எதிர்கொண்டது. ஹபீஸ் சையதுவை சிறையில் அடைப்பதாகச் சொல்லி இருக்கின்றனர். இது ஒரு நல்ல செய்தி. ஆனால், இதற்கு முன்பே இந்த கதையில்தான் இருந்தோம். இதே கடிகாரத்தை இதற்கு முன்பும் பார்த்தோம். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இம்ரான்கான் வாஷிங்டன்னில் நல்லது செய்தார் என்பதற்காக, பாகிஸ்தான் மீதான அழுத்தங்கள் முடிவுக்கு வரப்போவதில்லை.

கேள்வி; காஷ்மீர் விவகாரத்தில் முக்கியமான ஆதரவு தரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் கொண்டு வரப்பட்டது. டிரம்ப்புக்கு நெருக்கமான லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள், காஷ்மீர் விவகாரம், சிஏஏ., என்.ஆர்.சி ஆகிய விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் பாம்ப்போவாலுக்கு கடிதம் எழுதினர். தமது உள் விவகாரங்களில் தலையிடுவது குறித்து காங்கிரசின் கவனத்தை இந்தியா ஈர்க்க முயற்சித்தது. டிரம்ப் வந்திருக்கும் நிலையில் இது குறித்து விவாதிக்கப்படுமா?

பதில்; அமெரிக்காவில் உள்ள இந்திய அதிகாரிகள், எங்களுடைய அதிகாரிகள் ஆகியோர் எல்லா நேரங்களிலும் காங்கிரஸின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கவனத்தை திசைதிருப்பும் சில விஷயங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் இடையே, குறிப்பிட்ட வகையான விஷயங்களில் ஆரோக்கியமான, நேர்மையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு சிக்கலான நேரமாக இருக்கிறது என்றால். ஆம்,இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க காங்கிரஸூக்கு நிறைய கேள்விகள் வந்த நேரமாக இருக்கிறது. சில நேரங்களின் இது இந்தியாவின் உள்விவகாரங்கள் என்ற கருத்தியல் நிலவுகிறது. சில நேரங்களில் அவ்வாறு கருதுவதில்லை. ஆம். டிரம்ப், மோடி இடையே இது முக்கியமான விஷயமாக இருக்குமா என்று கேட்டால், என் உணர்வுக்கு எட்டியவகையில் இல்லை என்றுதான் சொல்வேன். இது அதிகாரத்துவத்தில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் விடப்படுவதற்கே சாத்தியங்கள் அதிகம். அமெரிக்காவில் இது எடுபடும் என்பதால், ஒரு வேளை மோடியிடம் டிரம்ப் குறிப்பிடக்கூடும். பல்வேறு வகைளில் டிரம்ப் கணிக்கமுடியாத அளவுக்கு இருக்கிறார். மோடியிடம் அவர் ஏதாவது சொன்னால், அது ஒரு விஷயமாக இருக்காது என்று கருதுகின்றேன். ஒரு கொள்கையுடன் அவர் இங்கு வரவில்லை. லிண்சே கிரஹாம் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் எழுதிய கடிதம், மோடியுடனான டிரம்ப்பின் பேச்சுவார்த்தைக்கான கருத்துகளைத் தீர்மானிப்பதாக இருக்காது.

கேள்வி; இருநாடுகளின் மக்களுக்கு இடையேயான திறன்வாய்ந்த யுக்திகளுக்கு அப்பால், குடியேற்ற சீரமைப்பு, எச்1பி விசாகுறித்த இந்தியாவின் கவலைகள் குறித்து டிரம்ப் பேசுவார் என்று கேள்விப்பட்டோம். இந்த பிரச்னைகளில் இன்றைக்கு அமெரிக்காவின் நிலை என்ன?

பதில்; இது ஒரு உண்மையான விஷயம். இது வெறுமனே டிரம்ப்பின், குடியேற்றம் தொடர்பான விமர்சனத்தின் சாராம்சம் மட்டும் அல்ல. இது இந்திய பணியாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளது. கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு எச்1பி விசாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நமக்குத் தெரியும். இந்திய தரப்பில் இது குறித்து மிகவும் கவலை கொண்டிருக்கின்றனர். இதில் என்னுடைய உணர்வுகள் என்பது, இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு நிலையில் இருக்கின்றன. இதர விஷயங்கள் எல்லாம் கடந்த காலத்தில் நடைபெற்ற உரசல்கள்தான். தன்னளவில் இதனை அதிகாரிகள் மட்டத்தில் இதை விட்டு விடுவோம். இந்த வருகை, இருதரப்பு உறவிலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். இந்திய தரப்பு லைட்ஹைசரை சுற்றி வரும் என்றும், டிரம்ப்பிடம் முறையிடலாம் என்றும் நான் நம்புகின்றேன். இந்தியா, அமெரிக்காவுக்கு இடையிலான மிக மெலிதான வர்த்தக ஒப்பந்தம் என்ன என்பது பற்றி அவர்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

கேள்வி; இந்தியா தொடர்புடைய அமெரிக்க கண்ணோட்டத்தில் இந்தோ-பசிப்பிக் விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்ன?

பதில்; இது இரண்டு வழிகளிலும் செயல்படும். இதில் இந்தியா, அமெரிக்கா இரண்டுமே ஈடுபாடு கொண்டுள்ளன. அமெரிக்கா இந்த விஷயத்தில் மேலும், மேலும் அதிக புரிதலைக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் ராஜதந்திரம் அங்கே நன்றாகவே இருக்கிறது. இப்போது அமெரிக்காவின் திறன் யுத்திகளுக்கான வரைபடத்தில் இந்தோ-பசிப்பிக் இல்லை. இன்றைக்கு மிகவும் அதிகமாக, தன்னில் இது இந்தோ அல்லது இந்தியாவின் திறன் யுக்தி வரைபடத்தில் இருக்கிறது. இந்த வரைபடத்தின் வரையறைகள் என்ன என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் இருக்கின்றோம். இது வெறுமனே செயல்களைப் பற்றியதா. நீலப்பொருளாதாரம், பொருளாதார தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு , நான்கு அல்லது ஐந்து முக்கியமான ராணுவ அதிகாரங்களை பின்னால் வைப்பதா. அந்த கூட்டுக்குழு இந்தோ-பசிபிக் மீது ஓரளவு சுதந்திரமான ஆட்சியைக் கொண்டுள்ளது. அது இன்னும் காணப்படவில்லை. தன்னியல்பில் இந்தோ-பசிபிக் தவிர நாற்புறமும் நீங்கள் அதிக சக்தியைக் கண்டிருக்கிறீர்கள். சீனா குறித்து முன்பு நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள். இதுதான் இந்தியா குறித்த எனது சொந்த உணர்வு. தந்திரமான யுக்தியுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருக்கிறது. சீனாவுடன் இணைந்து பணியாற்றும்போது, இருதரப்பு உறவுகளின் செயல்பாடு இன்னும் வேகத்தில் இருக்கிறது.இந்தோ-பசிபிக்கின் திறன்யுக்தியின் முடிவில், அழுத்தப்புள்ளியானது, நான்கு பக்கங்களை கொண்டதாக இருக்கும். ராஜதந்திரதரப்பில் விரைவுபடுத்துவது, இருதரப்பாக இருக்கும். அழுத்தம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.

கேள்வி: நான்குபுறமும் நிலையான கூற்று என்றபோதிலும், சீனாவை விலக்க அல்லது கட்டுப்படுத்துவதாக அது அர்த்தம் தரவில்லையா?பதில்: அப்படித்தான் அது அர்த்தம் தருகிறது. ஆனால், அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டெல்லி; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை தந்துள்ள நிலையில், இருதரப்பிலும், சில அதிமுக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை மேற்கொள்ள முயற்சிக்கலாம். பல மாதங்களாக சிக்கலில் இருக்கும் பகுதி வணிக ஒப்பந்தத்துக்கும் சாத்தியம் இருக்கிறது. எனினும், இந்த இருதரப்பு உறவில் வர்த்தகம் ஒரு வரையறுக்கப்பட்ட கூறாக கருதப்படாது என்கிறார் கார்னகி இந்தியா எனும் உலகளாவிய சிந்தனைக்குழுவின் முன்னணி இயக்குனர் ருத்ரா சவுத்ரி,

அறிஞர், எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர் சவுத்ரி, வர்த்தகம் ஒப்பந்தம் இன்னும் சாத்தியமில்லை என்று கருதுகிறார். பிரதமர் மோடி, வர்த்தக பிரதிநிதி லைட்ஹைசர் உடன் கடுமையான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டி இருக்கலாம் மற்றும் டிரம்ப் இடம் நேரடியாகவும் வேண்டுகோள் வைக்கலாம் என்று தெரிகிறது.

மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா, ருத்ரா சவுத்ரியுடன், இருநாட்டு உறவில் உள்ள சவால்கள், இந்த வருகையினால் உள்ள எதிர்பார்ப்புகள், இந்தியாவானது ரஷ்யா மற்றும் ஈரானுடன் இறுக்கமான சூழலில் இருப்பது, காஷ்மீர், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவிவகாரங்களில் சிக்கல்களை சமாளிப்பது, அதே போல சீனா தொடர்பாக இந்தோ-பசிபிக் கொள்கையில் சிக்கல்கள் ஆகியவை குறித்துப் பேசினார்.

கேள்வி; டெல்லி முதல் வாஷிங்டன் வரை, நீங்கள் நிறைய சந்திப்புகளை மேற்கொள்கின்றீர்கள். டிரம்ப் வருகையில் இருந்து இந்த குறிப்பிடத்தக்க பயணத்தில் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்; இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் எந்த ஒரு பயணம் மேற்கொண்டாலும் அதன் தன்மையில் அது முக்கியநிகழ்வாகவே இருக்கிறது. டெல்லியிலும், அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் பெரும் பொதுக்கூட்டத்திலும் என இரண்டு நாட்களை செலவிடுவதற்காகத்தான் அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிறார் என்பதுதான் உண்மை. இது ஒட்டு மொத்த உறவுக்கு ஊக்கமளிக்கிறது. ஒவ்வொரு உறவும், குறிப்பாக அமெரிக்க உடனான உறவில், அவ்வப்போது முக்கியத்துவத்தில் முதலாவதாக நினைவுப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இந்தியா உடன் கவனம் செலுத்துதல் என்பது அமெரிக்காவுக்கு நல்ல நேரமாகும். டிரம்ப் கீழிறங்கி வந்து அந்த நெருங்கத்தை அளிக்க வேண்டும்.

கேள்வி; சிலமாதங்களில் டிரம்ப் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். பதவி முடியப்போகும் கடைசி சிலமாதங்களில் கடந்த கால அதிபர்களைப் போல தோல்வியுற்ற நபராக மாறிவிடாமல் டிரம்ப் வலுவான சிறந்த இடத்தில் இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

பதில்; அவர், உங்களின் வழக்கமான அமெரிக்க அதிபர் அல்ல. அவர், வலுவான சிறந்த இடத்தில் இருக்கிறாரா? அவர் நல்ல போட்டியை முன்வைத்தால், அந்த இடம் இருக்கும். தமக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பிறகான தருணத்தில் முக்கியமான நேரத்தில் அவர் இந்தியாவுக்கு வருகிறார். அவருக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் விசாரணையைப் பொறுத்தவரை, இந்தியாவில் பெரும் அளவுக்கு ஊடகங்கள் அதனை பெரிதாக கவனம் செலுத்தவில்லை. செனட் சபை, அவரது மகிழ்ச்சியை அனுபவிக்க அனுமதிக்கும் என்ற அனுமானம் இருப்பதாகத் தோன்றியது. எனவே, அதுசரியாக இருக்கும். இதில் உண்மை என்னவென்றால், ஒரு அதிபராக கண்டன தீர்மானத்தின் மீதான விசாரணையை எதிர்கொண்ட நிலையில், சர்வதேச வரலாற்றில் ஒரு பெரிய விஷயமாகும். கண்டனத்தீர்மானத்துக்குப் பின்னர் அதே மாதத்தில் இந்தியாவுக்கு வருவதற்கான விருப்பம் என்பது தன்னில் அது சுவாரஸ்யமானதாகும். தவிர, டிரம்ப் தமது சொந்த வழியில் இந்த உறவை பாதுகாக்கிறார் என்பதையும், இந்தியாவில் மிகவும் முக்கியமாக, பிரதமர் நரேந்திரமோடி தமது சொந்த வழியில் தம்மை கவனித்துக் கொள்கிறார் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

கேள்வி; பிரதமர் மோடியைபோல மிமிக்ரி செய்ய அவர் முயற்சித்திருக்கிறார் அல்லது கடந்த காலங்களில் ஹார்லீசை பற்றி தொடர்ச்சியான கருத்துகளை சொல்லி இருக்கிறார். இந்த விமர்சனங்கள் டெல்லியை சங்கடப்படுத்தி உள்ளன. யார் டிரம்ப் என்பதற்கான ஒரு பகுதியாக மற்றும் முழுமையாக இது இருக்கிறதா? இவையெல்லாம் விளிம்பு பிரச்னைகள் என்று புறக்கணிப்பது இந்தியாவுக்கு சிறந்ததா?

பதில்; வர்த்தக பகுதியைப் பொறுத்தவரை இது ஒரு விளிம்பு விஷயம் அல்ல. இது ஒரு முக்கியமான விஷயம். நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்த உறவின் பெரிய திறன் வாய்ந்த அம்சத்துக்கு மேலாக முக்கியத்துவம் ஏதும் இல்லை. ஆகவே, வர்த்தக பகுதியில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அமெரிக்க முறைக்கு மட்டும் அதிர்ச்சியளிப்பதாக இல்லை. உலகின் பிறபகுதிகளைப் போலவே நிச்சயமாக இந்தியாவின் முறைக்கும் அதிர்ச்சிதான். உண்மை என்னவெனில், வர்த்தக விஷயத்தில், தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை பெரும்பாலானவற்றை பின்பற்றுகிறார். எந்த நாடுகளில் எது அவசியம் அவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக அவர் நம்பியதன் அடிப்படையில் இது இந்தியாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அது அலுமினியமாக , இரும்பாக, ஜிஎஸ்பி(விருப்பங்களின் பொதுவான அமைப்பு)-யாகவோ, இவையெல்லாம் ஒரு வழியில் அல்லது இதர வழியில் இந்தியாவை அடையலாம். வர்த்தக முன்னணியில் இந்த பதற்றம் இருக்கிறது. இந்த பெரிய உறவில், வர்த்தகம் ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு கூறாக மாற்றுவதற்கு சிறிதளவு மனோவசியத்தில் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடைய ஒரு அதிபர் இந்தியா வருகிறார். இருதரப்பிலும் 18 மாதங்களாக நிறைய வாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடந்த பிறகும், ஒரு சிறிய வர்த்தக ஒப்பந்ததுக்குக் கூட சாத்தியம் உங்களுக்கு இல்லை என்பதுதான் இதில் உண்மை. டிரம்ப் உடன் அதற்கான தொடர்பு குறைவாக இருக்கலாம். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசருடன் அதிகமாக இருக்கலாம். இந்த சிக்கல்களுடன் அது வரும்பொழுது, ஒரு வலிமையான எதிர்ப்பாளராக இருக்க வேண்டும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

கேள்வி; வர்த்தகத்தில், டிரம்ப் உட்பட வாஷிங்டன் ஏதாவது கடினமாக செய்கிறது. அந்த முழுமையான அழுத்ததால், வர்த்தகப்பற்றாக்குறையை குறைக்க, எண்ணைய் மற்றும் எரிவாயு கொள்முதல் வழியே புதுடெல்லி முயற்சிக்கிறது, அமெரிக்காவில் இருந்து ராணுவ கருவிகள், ஈரானில் இருந்து எண்ணைய் கொள்முதலை மறுபரிசீலனை செய்கிறது. இன்றைக்கு வர்த்தக உறவில், எப்படி பெரிய உராய்வு இருக்கிறது? தொழில்களில் இருந்தான ஒப்பந்தத்தில் என்ன ஒதுக்கீடுகள்?

பதில்; வர்த்தக ஒப்பந்தம், நிறைய செய்ய உள்ளது. ஒரு தனிநபரான ராபர்ட் லைட்ஹைசர், கடந்த 30 ஆண்டுகளாக சொந்த கருத்துகளைக் கொண்டிருக்கிறார். அது அனுமதிகளாக அல்லது 1980 காலகட்டத்தின் பின்னால் அல்லது 90 களின் காலகட்டத்தின் பின்னாலான செமி கண்டக்டர்களுக்கான கட்டணங்களாக இருக்கிறது. இது அனுமதிகளாக அல்லது கட்டணங்களாக இப்போது ஒட்டுமொத்த வகையிலான விஷயங்களாக, இருக்கிறது., அலுமினியம், இரும்பு, விவசாயம் அல்லது பல்வேறு பொருட்களில் அதன் வழியே அங்கே பொதுவான பாற்றாக்குறை இருப்பதாக அமெரிக்கா உணர்கிறது. இந்திய தரப்பில் இருந்து, உறவு முறையில் ஒரு பெரிய கருத்தை நாம் மேற்கொண்டிருக்கின்றோம் என்பதுதான் என்னுடைய உணர்வாக இருக்கிறது. உதாரணத்துக்கு உறவினை நீங்கள் வர்த்தகம் மற்றும் திறன் அல்லது வர்த்தகம் மற்றும் ராணுவ பாதுகாப்பு என்று நீங்கள் பிரித்துப் பார்த்தால், இந்திய-அமெரிக்க உறவில் ராணுவபாதுகாப்பு உண்மையில் நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் அமெரிக்க-இந்திய உறவுமுறை பற்றி பேசும்போதெல்லாம் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம் போன்ற கணிசமாக உயர்ந்த முடிவுகளை நாம் பார்க்கின்றோம். எந்த ஒரு அமைப்பிலும் அல்லது வடிவிலும் அமெரிக்கா-இந்தியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் நடைபெறப் போவதில்லை. எனவே இந்த வருகையின் விளைவு குறித்த எதிர்பார்ப்புகளை நாம் குறைக்க வேண்டும். இந்த வருகை , இருதரப்பு உறவில் பெரிய சமநிலை நம்பிக்கை என்ற சாரம்சத்தைக் கொண்டதாகும். எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தமும் இருக்காது என்பது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வருகையின் முக்கியத்துவத்தில் இருந்து அது எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. பாதுகாப்பு தரப்பைப் பொறுத்தவரை, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இணக்கமான ஆராய்ச்சி & வளர்ச்சி மையங்களை அமைப்பது குறித்த ஒரு பேச்சுவார்த்தை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைச் சுற்றியுள்ள புதிய நிகழ்வுகளை நீங்கள் காணலாம்.

கேள்வி; விநியோகப் பரிமாற்ற ஒப்பந்தம் போன்றவை கையெழுத்தானதில், அடிப்படைப் பகுதிகளை அமல்படுத்துவதற்கான நிலைப்பாடு எங்கே இருக்கிறது?

பதில்; இது ஒரு மெதுவான செயல்பாடு. பாதுகாப்பு என்பது ஒத்திசைவு பற்றியதாகும். 2005-ம் ஆண்டுக்குப் பின்னால், அப்போதைய அரசாங்கங்கள் முக்கியமான ஒரு முயற்சி எடுக்கப்பட்டபோது, இருதரப்பு உறவின் உத்தியில் அடுத்தகட்டமாக இருந்தது. இவை எல்லாமே ஒத்திசைவு குறித்த சட்டங்கள், கொள்கைகள், தரநிலைகளைக் கொண்டி ருக்கின்றன. இதனால் அமெரிக்கா-இந்தியாவானது ஒரு வலுவான திறன்வாய்ந்த உறவை பயன்படுத்தலாம் மற்றும் ஆராயலாம். விநியோகப் பரிமாற்ற ஒப்பந்தம் என்று வரும்போது, இன்னும் கேள்விகள் எழுப்பபட வேண்டி இருக்கிறது. இன்னொரு புறம், இந்த உறவில் பாதுகாப்பு தொழில்நுட்பம், வர்த்தக முயற்சிகளுக்கான செயல்பாட்டை நீங்கள் பார்க்கலாம். இதில் நீங்கள் பெரும் அளவிலான வளர்ச்சியை பார்க்கலாம். இருதரப்பிலும், நிலையான இயக்க நடைமுறைகளில் அடிப்படையில் பொதுவான புரிதலுக்கு வந்திருக்கின்றனர். எனவே, பாதுகாப்பு என்பது மெதுவான செயல்பாடாக இருக்கிறது. ஆனால், நாம் சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு வெளிச்சத்தை பார்க்கத் தொடங்கி இருக்கின்றோம்.

கேள்வி; ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்த விஷயத்தில், பொருளாதாரத்தடைகள் மூலம் எதிரிகளை எதிர்கொள்வது என்ற அமெரிக்காவின் நிழல் இன்னும் பெரிதாக இருக்கிறதா? இந்த பேச்சுவார்த்தையில் அதுவும் இடம்பெறுமா?

பதில்; அது ரஷ்யாவாக இருந்தாலும், எண்ணைய் அல்லது ஈரானாக இருந்தாலும் இவையெல்லாம் எப்போதுமே விஷயங்களாக இருக்கின்றன. அதனை சுற்றி இந்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது. இது இந்திய தரப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியாக இதை யாராவது எடுத்துக் கொள்வார்கள் என்று நான் கருதவில்லை. அமெரிக்கா உடனான, ஒப்பந்தத்தில் இன்றைக்கு உயர்ந்த பட்சமான முதிர்வை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் கருதுகின்றேன். ஒரு நாடு என்ற வகையில் பொருளாதாரத்தடைகள் மூலம் எதிரிகளை எதிர்கொள்வது என்ற அமெரிக்காவை சமாளித்து ஒரு வழியாக வெளியே வந்து விட்டோம். ஈரானுக்கான பொருளாதாரத் தடைகளில் , உண்மையில் கச்சா எண்ணை விலை எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை சமாளித்து ஈரான், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவு கொண்டிருக்கின்றோம். இது சமகால சிக்கல்களை கையாளுவதற்கான கேள்வி மட்டுமல்ல. இன்னதென்று சொல்ல முடியாத அமெரிக்காவின் அணுகுமுறைகளை எதிர்கொள்வதில், வரலாற்று ரீதியாக சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆகவே, ஏற்கனவே இருந்ததை விடவும், மேலும் அதிக கணிக்க முடியாத தாக இந்த சூழல், இருக்கும். ஆனால், என்னுடைய உணர்வில், இந்திய தரப்பின் அணுகுமுறையைப் பார்க்கும்போது, டிரம்ப் இடம் இருந்து முடிந்ததைப் பெற, தந்திரமான சிக்கல்களைச் சுற்றி கவனமாக அது காய்நகர்த்தப்போகிறது.

கேள்வி; டோக்லாம் பிரச்னைக்குப் பின்னர், அமெரிக்காவின் நிலை எதிர்பார்த்தபடி இல்லாததால், சீனா, ரஷ்யா உடனா உறவுகளுக்கு இந்தியா புத்துயிரூட்டியதை நாம் பார்த்தோம். ஆஃப்கானிஸ்தானின் அமைதித்திட்டத்தை மனதில் வைத்து, டிரம்ப் பாகிஸ்தானை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையை சமாளிக்க இந்தியாவுக்கு கூடுதல் திறன் தேவைப்படுகிறதா?

பதில்; இது டோக்லாமுககு வந்தபோது, சில ஆபத்துகளுககு தம்மை வெளிப்படுத்துவதாக நாம் எதிர்பார்த்தபடி அமெரிக்கர்கள் இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. அந்த நேரத்தில் வெளியுறவுத்துறை அல்லது வெள்ளை மாளிகை வெளியிட்ட பெரும்பாலான அறிக்கைகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், இந்தியாவைப் பொறுத்தவரை அவை நியாயமானது என்று கூறி இருக்கின்றன. கடைசியாக‍ அதில், 2017-ம் ஆண்டின் நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

சீனாவுடன் நீங்கள் ஒரு பதற்றமான சூழலில் இருக்கும்போது, உங்களிடம் உள்ள நூற்றுக்கணக்கனக்கான இந்திய வீரர்கள் விரோதம் மற்றும் அவநம்பிக்கையோடு இருப்பார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் சீன-பூட்டான் பகுதியில் இதை எதிர்கொள்வார்கள். தேவையற்ற வகையில் அமெரிக்கா குறுக்கிட்டு, அந்த சிக்கலை அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை. டோக்லாம் பிரச்னை, இந்திய-அமெரிக்க உறவை பாதிக்கும் என்று நான் கருதவில்லை. இரண்டாவதாக, இது பாகிஸ்தான் என்று வரும்போது, சர்வதேச தலைவர்களிடம் டிரம்ப் தமது சொந்த வழியை கொண்டிருக்கிறார்.இம்ரான்கான் வாஷிங்க்டன்னுக்கு வெளியே பயணித்தபோது, இரண்டு ராக் இசை நட்சத்திரங்கள் ஒருவருக்கு ஒருவர் நேரத்தை செலவிடுதுபோல இருந்தது. ஒருவருக்கு ஒருவர் ஈர்த்துக் கொண்டனர். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான பெரிய கட்டமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. தீவிரவாதத்தில் அழுத்தம் இருக்கிறது. அண்மையில் கூட நிதிநடவடிக்கை பணிக்குழுவிலிருந்து பாகிஸ்தான் அழுத்த த்தை எதிர்கொண்டது. ஹபீஸ் சையதுவை சிறையில் அடைப்பதாகச் சொல்லி இருக்கின்றனர். இது ஒரு நல்ல செய்தி. ஆனால், இதற்கு முன்பே இந்த கதையில்தான் இருந்தோம். இதே கடிகாரத்தை இதற்கு முன்பும் பார்த்தோம். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இம்ரான்கான் வாஷிங்டன்னில் நல்லது செய்தார் என்பதற்காக, பாகிஸ்தான் மீதான அழுத்தங்கள் முடிவுக்கு வரப்போவதில்லை.

கேள்வி; காஷ்மீர் விவகாரத்தில் முக்கியமான ஆதரவு தரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் கொண்டு வரப்பட்டது. டிரம்ப்புக்கு நெருக்கமான லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள், காஷ்மீர் விவகாரம், சிஏஏ., என்.ஆர்.சி ஆகிய விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் பாம்ப்போவாலுக்கு கடிதம் எழுதினர். தமது உள் விவகாரங்களில் தலையிடுவது குறித்து காங்கிரசின் கவனத்தை இந்தியா ஈர்க்க முயற்சித்தது. டிரம்ப் வந்திருக்கும் நிலையில் இது குறித்து விவாதிக்கப்படுமா?

பதில்; அமெரிக்காவில் உள்ள இந்திய அதிகாரிகள், எங்களுடைய அதிகாரிகள் ஆகியோர் எல்லா நேரங்களிலும் காங்கிரஸின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கவனத்தை திசைதிருப்பும் சில விஷயங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய அதிகாரிகள், அமெரிக்க காங்கிரஸ் இடையே, குறிப்பிட்ட வகையான விஷயங்களில் ஆரோக்கியமான, நேர்மையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு சிக்கலான நேரமாக இருக்கிறது என்றால். ஆம்,இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க காங்கிரஸூக்கு நிறைய கேள்விகள் வந்த நேரமாக இருக்கிறது. சில நேரங்களின் இது இந்தியாவின் உள்விவகாரங்கள் என்ற கருத்தியல் நிலவுகிறது. சில நேரங்களில் அவ்வாறு கருதுவதில்லை. ஆம். டிரம்ப், மோடி இடையே இது முக்கியமான விஷயமாக இருக்குமா என்று கேட்டால், என் உணர்வுக்கு எட்டியவகையில் இல்லை என்றுதான் சொல்வேன். இது அதிகாரத்துவத்தில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் விடப்படுவதற்கே சாத்தியங்கள் அதிகம். அமெரிக்காவில் இது எடுபடும் என்பதால், ஒரு வேளை மோடியிடம் டிரம்ப் குறிப்பிடக்கூடும். பல்வேறு வகைளில் டிரம்ப் கணிக்கமுடியாத அளவுக்கு இருக்கிறார். மோடியிடம் அவர் ஏதாவது சொன்னால், அது ஒரு விஷயமாக இருக்காது என்று கருதுகின்றேன். ஒரு கொள்கையுடன் அவர் இங்கு வரவில்லை. லிண்சே கிரஹாம் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் எழுதிய கடிதம், மோடியுடனான டிரம்ப்பின் பேச்சுவார்த்தைக்கான கருத்துகளைத் தீர்மானிப்பதாக இருக்காது.

கேள்வி; இருநாடுகளின் மக்களுக்கு இடையேயான திறன்வாய்ந்த யுக்திகளுக்கு அப்பால், குடியேற்ற சீரமைப்பு, எச்1பி விசாகுறித்த இந்தியாவின் கவலைகள் குறித்து டிரம்ப் பேசுவார் என்று கேள்விப்பட்டோம். இந்த பிரச்னைகளில் இன்றைக்கு அமெரிக்காவின் நிலை என்ன?

பதில்; இது ஒரு உண்மையான விஷயம். இது வெறுமனே டிரம்ப்பின், குடியேற்றம் தொடர்பான விமர்சனத்தின் சாராம்சம் மட்டும் அல்ல. இது இந்திய பணியாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளது. கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு எச்1பி விசாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நமக்குத் தெரியும். இந்திய தரப்பில் இது குறித்து மிகவும் கவலை கொண்டிருக்கின்றனர். இதில் என்னுடைய உணர்வுகள் என்பது, இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு நிலையில் இருக்கின்றன. இதர விஷயங்கள் எல்லாம் கடந்த காலத்தில் நடைபெற்ற உரசல்கள்தான். தன்னளவில் இதனை அதிகாரிகள் மட்டத்தில் இதை விட்டு விடுவோம். இந்த வருகை, இருதரப்பு உறவிலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். இந்திய தரப்பு லைட்ஹைசரை சுற்றி வரும் என்றும், டிரம்ப்பிடம் முறையிடலாம் என்றும் நான் நம்புகின்றேன். இந்தியா, அமெரிக்காவுக்கு இடையிலான மிக மெலிதான வர்த்தக ஒப்பந்தம் என்ன என்பது பற்றி அவர்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

கேள்வி; இந்தியா தொடர்புடைய அமெரிக்க கண்ணோட்டத்தில் இந்தோ-பசிப்பிக் விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் என்ன?

பதில்; இது இரண்டு வழிகளிலும் செயல்படும். இதில் இந்தியா, அமெரிக்கா இரண்டுமே ஈடுபாடு கொண்டுள்ளன. அமெரிக்கா இந்த விஷயத்தில் மேலும், மேலும் அதிக புரிதலைக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் ராஜதந்திரம் அங்கே நன்றாகவே இருக்கிறது. இப்போது அமெரிக்காவின் திறன் யுத்திகளுக்கான வரைபடத்தில் இந்தோ-பசிப்பிக் இல்லை. இன்றைக்கு மிகவும் அதிகமாக, தன்னில் இது இந்தோ அல்லது இந்தியாவின் திறன் யுக்தி வரைபடத்தில் இருக்கிறது. இந்த வரைபடத்தின் வரையறைகள் என்ன என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் இருக்கின்றோம். இது வெறுமனே செயல்களைப் பற்றியதா. நீலப்பொருளாதாரம், பொருளாதார தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு , நான்கு அல்லது ஐந்து முக்கியமான ராணுவ அதிகாரங்களை பின்னால் வைப்பதா. அந்த கூட்டுக்குழு இந்தோ-பசிபிக் மீது ஓரளவு சுதந்திரமான ஆட்சியைக் கொண்டுள்ளது. அது இன்னும் காணப்படவில்லை. தன்னியல்பில் இந்தோ-பசிபிக் தவிர நாற்புறமும் நீங்கள் அதிக சக்தியைக் கண்டிருக்கிறீர்கள். சீனா குறித்து முன்பு நீங்கள் கேள்வி எழுப்பினீர்கள். இதுதான் இந்தியா குறித்த எனது சொந்த உணர்வு. தந்திரமான யுக்தியுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருக்கிறது. சீனாவுடன் இணைந்து பணியாற்றும்போது, இருதரப்பு உறவுகளின் செயல்பாடு இன்னும் வேகத்தில் இருக்கிறது.இந்தோ-பசிபிக்கின் திறன்யுக்தியின் முடிவில், அழுத்தப்புள்ளியானது, நான்கு பக்கங்களை கொண்டதாக இருக்கும். ராஜதந்திரதரப்பில் விரைவுபடுத்துவது, இருதரப்பாக இருக்கும். அழுத்தம் என்பது நான்கு பக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.

கேள்வி: நான்குபுறமும் நிலையான கூற்று என்றபோதிலும், சீனாவை விலக்க அல்லது கட்டுப்படுத்துவதாக அது அர்த்தம் தரவில்லையா?பதில்: அப்படித்தான் அது அர்த்தம் தருகிறது. ஆனால், அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.