ETV Bharat / bharat

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: விரைந்து விசாரிக்க திமுக கோரிக்கை - ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

புது டெல்லி: ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கினை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ops support mla eligibility elimination case petition by DMK
ops support mla eligibility elimination case petition by DMK
author img

By

Published : Jan 24, 2020, 3:36 PM IST

தமிழ்நாடு சட்டப் பேரவையில் எடப்பாடி அரசின் மீது நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கினை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவிடம் இவ்வழக்கினை அடுத்த வாரம் விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி போப்டே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது பற்றி பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். அப்போது, சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் நின்றார்.

இந்தச் சூழலில் பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமானது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று கொண்டு வரப்பட்டது. அப்போது ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேர் சேர்ந்து பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதற்கிடையே சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அப்போது முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் முறையிட்டனர். இதன்பேரில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதற்கிடையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவரது அணியில் இருந்த எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக்கப்பட்டார். இந்தச் சூழலில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சபாநாயகருக்கு உண்டான அதிகாரத்தில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கூறியதையடுத்து, திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பாப்டே கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருடன் பினராயி விஜயன் விரைவில் சந்திப்பு

தமிழ்நாடு சட்டப் பேரவையில் எடப்பாடி அரசின் மீது நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கினை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவிடம் இவ்வழக்கினை அடுத்த வாரம் விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி போப்டே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது பற்றி பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். அப்போது, சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் நின்றார்.

இந்தச் சூழலில் பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமானது 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று கொண்டு வரப்பட்டது. அப்போது ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேர் சேர்ந்து பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதற்கிடையே சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அப்போது முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் முறையிட்டனர். இதன்பேரில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதற்கிடையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவரது அணியில் இருந்த எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக்கப்பட்டார். இந்தச் சூழலில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து சபாநாயகருக்கு உண்டான அதிகாரத்தில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கூறியதையடுத்து, திமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பாப்டே கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருடன் பினராயி விஜயன் விரைவில் சந்திப்பு

Intro:Body:



புது டெல்லி:



தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி கே பழனிசாமி அரசின் மீது நடந்த நம்பிக்கையில்லா தீர்மாமத்தின் மீதான வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கினை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவிடம் வழக்கினை அடுத்த வாரம் விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.



இதையடுத்து, தலைமை நீதிபதி போப்டேவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது பற்றி பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். அப்போது, சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார்.



இந்த சூழலில் பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் பிப்ரவரி 18, 2017 அன்று கொண்டு வரப்பட்டது. அப்போது,ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.



இதற்கிடையே சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அப்போது முதல்வரை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆளுநரிடம் முறையிட்டனர். 



இதன்பேரில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.



இதற்கிடையில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தன. துணை முதல்வராக பன்னீர்செல்வமும்,  அவரது அணியில் இருந்த எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் அமைச்சராக்கப்பட்டார்.



 இந்த சூழலில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.





சபநாயகருக்குண்டான அதிகாரத்தில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கூறியதையடுத்து, திமுக உச்சநீதிமன்றத்தை நாடியது.



இரண்டு வருடத்துக்கு மேலாக கிடப்பில் உள்ள இந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.



இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பாப்டே கூறினார்.


Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.