ETV Bharat / bharat

'காங்கிரசின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்வேன்!' - என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்

புதுச்சேரி: காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் பரிசு கூப்பன் வழங்கி காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது எனவும் அதனை எதிர்த்து விரைவில் வழக்குத் தொடரப்போவதாகவும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்

author img

By

Published : Oct 25, 2019, 7:01 PM IST

NR Congress Candidate about the By-election

இது குறித்து புவனேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த இடைத்தேர்தலில் 21 நாள்கள் தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தோம். அதற்காக எங்களுடன் பணியாற்றிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விதிமீறல்களை காவல் துறையும் தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நாளன்று அனைத்து வீடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இது குறித்து புகாரளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

என்.ஆர். காங்கிரஸ் இடைத்தேர்தல் வேட்பாளர் புவனேஸ்வரன் செய்தியாளர் சந்திப்பு

பணம், பரிசுப்பொருள்கள், இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்டவை கொடுத்து ஆளுங்கட்சி வேட்பாளர் வாக்குப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் ஏராளமான பரிசுப் பொருள்களும் டோக்கனும் வழங்கி வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியை எதிர்த்து சில நாள்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் க்யார் புயலின் தீவிரம் அதிகரிக்கும்! - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இது குறித்து புவனேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த இடைத்தேர்தலில் 21 நாள்கள் தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தோம். அதற்காக எங்களுடன் பணியாற்றிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விதிமீறல்களை காவல் துறையும் தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் நாளன்று அனைத்து வீடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இது குறித்து புகாரளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

என்.ஆர். காங்கிரஸ் இடைத்தேர்தல் வேட்பாளர் புவனேஸ்வரன் செய்தியாளர் சந்திப்பு

பணம், பரிசுப்பொருள்கள், இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்டவை கொடுத்து ஆளுங்கட்சி வேட்பாளர் வாக்குப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் ஏராளமான பரிசுப் பொருள்களும் டோக்கனும் வழங்கி வெற்றிபெற்றுள்ளார். இந்த வெற்றியை எதிர்த்து சில நாள்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த 24 மணி நேரத்தில் க்யார் புயலின் தீவிரம் அதிகரிக்கும்! - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Intro:காமராஜர் தொகுதி இடைத்தேர்தல் பரிசு கூப்பன் வழங்கி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது இதுதொடர்பாக விரைவில் வழக்கு தொடருவேன் என்று என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்


Body:புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் காமராஜ் நகர் இடைத்தேர்தலில் 21 நாட்கள் தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தோம். இதற்காக எங்களுடன் பணியாற்றிய கூட்டணி கட்சியினரும் கட்சி நிர்வாகிகளும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கத்தில் எங்களுக்கு சாதகமாகத்தான் இருந்தது தேர்தல் துறையும் காவல் துறையும் ஆளுங்கட்சியின் தேர்தல் விதிமீறல்கள் அனைத்தையும் வேடிக்கை தான் பார்த்ததே தவிர ஆளும் கட்சி விதிமீறல் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குறிப்பாக தேர்தல் தினத்தில் அனைத்து வீடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது இதுகுறித்து புகார் அளித்து பரிசுபொருட்கள் யார் தருகிறார்கள் என்றும் தெரிவித்தும் அவர்கள் மீது முதலில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை பின்னர் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியதை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்

பணம் ,பரிசுபொருட்கள், இலவச கேபிள் இணைப்பு உள்ளிட்டவை கொடுத்து ஆளுங்கட்சி வேட்பாளர் ஓட்டு பெற்றுள்ளார் ஒன்றரை ஆண்டுக்கும் காமராஜர் தொகுதியில் கேபிள் கட்டணம் கிடையாது இவ்வளவு சங்கடங்கள் சிரமத்திற்கு இடையே எனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் இலவசங்களுக்காக தேர்தல் நடத்தக்கூடாது டோக்கன் வழங்கி ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளது தொடர்பாக ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் வழக்கு செய்ய உள்ளேன் இலவசம் கொடுப்பதை தடுத்து நிறுத்த முடியாவிட்டால் ஏன் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும் யார் அதிக பணம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றதாக அறிவித்து விடலாமே

தொடர்ந்து இந்த தொகுதி மக்களுக்காக சேவை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்


பேட்டி புவனேஸ்வரன் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்


Conclusion:காமராஜர் தொகுதி இடைத்தேர்தல் பரிசு கூப்பன் வழங்கி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது இதுதொடர்பாக விரைவில் வழக்கு தொடருவேன் என்று என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.