ETV Bharat / bharat

சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட ஹெச்ஐவி பாதித்தவரின் உடல்!

author img

By

Published : Apr 20, 2020, 1:52 PM IST

ஹைதராபாத்: கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை மருத்துவமனைக்குச் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

no-vehicles-dead-hiv-patient-carried-on-cycle-to-hospital-in-tgana
no-vehicles-dead-hiv-patient-carried-on-cycle-to-hospital-in-tgana

கரோனா வைரஸ் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடிவருகின்றனர். தெலங்கானா மாநிலம் கம்மா ரெட்டி மாவட்டத்தில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் மருத்துவமனைக்குச் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறையினர் தரப்பில், '' ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட அந்த நபர் ஏழைகளுக்கான தங்குமிடத்தில் இருந்தார். சில ஆண்டுகளாக ஹெச்ஐவிக்குச் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டுசென்று உடற்கூறாய்வு செய்ய ஆம்புலன்சை அழைத்தோம்.

கரோனா வைரஸ் காரணமாக ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை. இதையடுத்து சில சுகாதாரப் பணியாளர்களின் உதவியோடு அவரது உடல் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்டது. நிர்மல் மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சரக்கு கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த அக்கா-தம்பி மரணம்!

கரோனா வைரஸ் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திண்டாடிவருகின்றனர். தெலங்கானா மாநிலம் கம்மா ரெட்டி மாவட்டத்தில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் மருத்துவமனைக்குச் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறையினர் தரப்பில், '' ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட அந்த நபர் ஏழைகளுக்கான தங்குமிடத்தில் இருந்தார். சில ஆண்டுகளாக ஹெச்ஐவிக்குச் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டுசென்று உடற்கூறாய்வு செய்ய ஆம்புலன்சை அழைத்தோம்.

கரோனா வைரஸ் காரணமாக ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை. இதையடுத்து சில சுகாதாரப் பணியாளர்களின் உதவியோடு அவரது உடல் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்டது. நிர்மல் மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சரக்கு கிடைக்காத விரக்தியில் சானிடைசரை குடித்த அக்கா-தம்பி மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.