ETV Bharat / bharat

மருத்துவமனையில் பாதுகாப்பாளர் ஜெயகோஷிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை - மருத்துவமனையில் பாதுகாப்பாளர் ஜெயகோஷிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட் தூதரக ஜெனரல் ஜமால் உசேன் அல் ஜாபியின் பாதுகாப்பாளர் ஜெயகோஷிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் பாதுகாப்பாளர் ஜெயகோஷிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை
மருத்துவமனையில் பாதுகாப்பாளர் ஜெயகோஷிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை
author img

By

Published : Jul 21, 2020, 8:07 AM IST

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயகோஷிடம், தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில், தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட் தூதரக ஜெனரல் அட்டாச்சின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலர் சாரித்குமாருடன், தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட பொருள்களை சேகரிக்க விமான நிலையத்திற்கு சென்றதாக ஏஜென்சி அலுவலருக்கு சாட்சியமளித்தார்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் வழிகாட்டுதலின் பேரில், பல முறை பொருள்களை சேகரித்ததாக ஜெயகோஷ் ஏஜென்சி அலுவலர்களிடம் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் ஸ்வப்னா, கோஷிடம் சில முறை பேசியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எவ்வாறாயினும், ராஜதந்திர பெட்டி மூலம் தங்கம் கடத்தப்படுவதாக தனக்கு தெரியாது என்றும், விமான நிலையத்தில் தங்கம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்திய ஊடக அறிக்கைகளிலிருந்தே அந்த பொருள்களில் தங்கம் இருப்பதை அறிந்ததாகவும் அவர் கூறினார்.

பாதுகாவலராக கோஷ் குணமடைந்து வீடு திரும்பியவுடன், தேசிய புலனாய்வு அமைப்பினர், இந்த தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணையை நடத்துவார்கள் என தெரிகிறது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயகோஷிடம், தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில், தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட் தூதரக ஜெனரல் அட்டாச்சின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மக்கள் தொடர்பு அலுவலர் சாரித்குமாருடன், தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட பொருள்களை சேகரிக்க விமான நிலையத்திற்கு சென்றதாக ஏஜென்சி அலுவலருக்கு சாட்சியமளித்தார்.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் வழிகாட்டுதலின் பேரில், பல முறை பொருள்களை சேகரித்ததாக ஜெயகோஷ் ஏஜென்சி அலுவலர்களிடம் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் ஸ்வப்னா, கோஷிடம் சில முறை பேசியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

எவ்வாறாயினும், ராஜதந்திர பெட்டி மூலம் தங்கம் கடத்தப்படுவதாக தனக்கு தெரியாது என்றும், விமான நிலையத்தில் தங்கம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்திய ஊடக அறிக்கைகளிலிருந்தே அந்த பொருள்களில் தங்கம் இருப்பதை அறிந்ததாகவும் அவர் கூறினார்.

பாதுகாவலராக கோஷ் குணமடைந்து வீடு திரும்பியவுடன், தேசிய புலனாய்வு அமைப்பினர், இந்த தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணையை நடத்துவார்கள் என தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.