கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியப் பிரதேசத்தில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் முதலமைச்சராக பதவியேற்றார். ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமான காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை அமைக்காமலேயே அங்கு பாஜக ஆட்சியை நடத்திவருகிறது. எனவே, அமைச்சரவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.
இதனிடையே, அமைச்சரவை விரிவாக்கம் இன்று மதியம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு சிலர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சிந்தியாவின் ஆதரவாளர்களில் மூவர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர்கூட இல்லாமல் மாநிலம் இயங்குவதை பலர் விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாய் காப்பீடு
!