ETV Bharat / bharat

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு உதவிய 6 பயங்கரவாதிகள் கைது!

ஸ்ரீநகர்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்பிலிருந்த நர்கோ-பயங்கரவாதிகள் 6 பேர் சடூரா பகுதியில் கைதுசெய்யப்பட்டனர்.

author img

By

Published : Jun 1, 2020, 4:42 PM IST

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு உதவிய 6 நர்கோ-பயங்கரவாதிகள் கைது!
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு உதவிய 6 நர்கோ-பயங்கரவாதிகள் கைது!

மத்திய காஷ்மீர் புத்கம் மாவட்டம் சதூரா பகுதியில் நர்கோ பயங்கரவாதிகள் (narco terror module) முகாமிட்டிருந்தனர். இவர்கள் போதைப்பொருள்களை விற்பது, ஆயுதங்களைக் கடத்துவது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்குப் பணம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, இம்முகாமைச் சேர்ந்த முதாசீர் பயாஸ், ஷபீர் கனாய், சாகீர் அகமது போஸ்வால், இஷாக் பட், அர்ஷீட் தோகீர் ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இது குறித்து மூத்த காவல் அலுவலர், “முதற்கட்ட விசாரணையில் இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது. போதைப்பொருள்களைக் கடத்துவது, பயங்கரவாத அமைப்பிற்கு ஆயுதங்களைக் கைமாற்றுவது, அதோடு ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளுடன் பணப்பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது.

இந்த கைது நடவடிக்கையில் பயங்கரவாதிகளுடனும், போதைப்பொருள் கடத்துபவர்களுடன் தொடர்பில் இருப்பது அம்பலமானது” என்றார்.

இவர்களிடமிருந்து சீன துப்பாக்கி, சீன துப்பாக்கி குண்டுகள், ஒரு கிலோ ஹெராயின், கைக்குண்டுகள், ஒரு லட்சத்து 55 ஆயிரம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதையும் படிங்க: போராட்டத் தீயை பற்ற வைத்த ஃப்ளாய்ட்!

மத்திய காஷ்மீர் புத்கம் மாவட்டம் சதூரா பகுதியில் நர்கோ பயங்கரவாதிகள் (narco terror module) முகாமிட்டிருந்தனர். இவர்கள் போதைப்பொருள்களை விற்பது, ஆயுதங்களைக் கடத்துவது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்குப் பணம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, இம்முகாமைச் சேர்ந்த முதாசீர் பயாஸ், ஷபீர் கனாய், சாகீர் அகமது போஸ்வால், இஷாக் பட், அர்ஷீட் தோகீர் ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இது குறித்து மூத்த காவல் அலுவலர், “முதற்கட்ட விசாரணையில் இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது. போதைப்பொருள்களைக் கடத்துவது, பயங்கரவாத அமைப்பிற்கு ஆயுதங்களைக் கைமாற்றுவது, அதோடு ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளுடன் பணப்பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது.

இந்த கைது நடவடிக்கையில் பயங்கரவாதிகளுடனும், போதைப்பொருள் கடத்துபவர்களுடன் தொடர்பில் இருப்பது அம்பலமானது” என்றார்.

இவர்களிடமிருந்து சீன துப்பாக்கி, சீன துப்பாக்கி குண்டுகள், ஒரு கிலோ ஹெராயின், கைக்குண்டுகள், ஒரு லட்சத்து 55 ஆயிரம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதையும் படிங்க: போராட்டத் தீயை பற்ற வைத்த ஃப்ளாய்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.