ETV Bharat / bharat

புதுச்சேரி வீடுகளில் மர்ம குறியீடு - பொதுமக்கள் பீதி

புதுச்சேரி: புதுச்சேரி சாரம் என்ற பகுதியில் உள்ள வீடுகளின் வெளிச் சுவரில் மர்மக் குறியீடுகள் வரையப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

pysign
author img

By

Published : Aug 5, 2019, 12:58 PM IST

புதுச்சேரியின் சாரம் பகுதி நகரின் மத்திய பகுதியில் உள்ளது. இப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அங்குள்ள 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் வெளிப்புறச் சுவரில் மர்மக் குறியீடு போன்ற பொம்மை உருவம் வரையப்பட்டுள்ளது.

இந்தக் குறியீடுகள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்களில் இரவு நேரங்களில் வரையப்பட்டதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர். புதுச்சேரியில் தொடர்ச்சியாக வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், திருடர்கள் கொள்ளையடிக்க வசதியாக முன்கூட்டியே வேவு பார்த்து அடையாளத்திற்காக இந்தக் குறியீடுகளை வரைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

puducherrysign

இதையடுத்து, அப்பகுதியினர் காவல் துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

புதுச்சேரியின் சாரம் பகுதி நகரின் மத்திய பகுதியில் உள்ளது. இப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அங்குள்ள 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் வெளிப்புறச் சுவரில் மர்மக் குறியீடு போன்ற பொம்மை உருவம் வரையப்பட்டுள்ளது.

இந்தக் குறியீடுகள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்களில் இரவு நேரங்களில் வரையப்பட்டதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர். புதுச்சேரியில் தொடர்ச்சியாக வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில், திருடர்கள் கொள்ளையடிக்க வசதியாக முன்கூட்டியே வேவு பார்த்து அடையாளத்திற்காக இந்தக் குறியீடுகளை வரைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

puducherrysign

இதையடுத்து, அப்பகுதியினர் காவல் துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:புதுச்சேரி திருடன் நோக்கத்திற்காக சாரம் பகுதியில் அடையாள குறியீடு வரையப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது


Body:புதுச்சேரி சாரம் பகுதி மாநகரின் மத்திய பகுதி அமைந்துள்ளது இந்த பகுதியில் உள்ள சுப்பிரமணிய தெருவில் சுமார் 60 வீடுகளுக்கு மேல் உள்ளன இதில் 12க்கும் மேற்பட்ட வீடுகளில் வாசல் பகுதியில் பொம்மை படம் போட்டு அடையாளக் குறியீடுகள் வரையப்பட்டுள்ளது இந்த பகுதி மக்களிடையே இது பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது இந்த அடையாளக் குறியீடுகள் அனைத்தும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வரைப்பட்டிருப்பதாக இந்த வீதி வாசிகள் தெரிவித்துள்ளனர் பொதுவாக வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தங்கள் கொள்ளை அடிக்க செல்லும் வீடுகளில் இது போன்று அடையாளக் குறியீடுகள் வரப்படுவது வழக்கம் அதுபோல இதுவும் இருக்குமோ என்று அஞ்சிய பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதையடுத்து போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் இந்த அடையாள குறியீடு வரையப்பட்டுள்ள வீடுகள் அனைத்திலும் குழந்தைகள் முதியவர்கள் இருப்பதால் பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்காமல் காவல் காத்து வருவது குறிப்பிடத்தக்கது

பேட்டி மாலதி இப்பகுதி மக்கள்


Conclusion:புதுச்சேரி திருடன் நோக்கத்திற்காக சாரம் பகுதியில் அடையாள குறியீடு வரையப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.