குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரணாப் முகர்ஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளார். இருந்தபோதிலும், அவருடைய சிறுநீரக செயல்பாடுகளில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரணாப்பின் ரத்த ஓட்டம், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு வீதம் உள்ளிட்டவை சீராக உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.