ETV Bharat / bharat

இ.எம்.ஐ வட்டி குறித்த இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

author img

By

Published : Sep 2, 2020, 4:22 AM IST

டெல்லி : கரோனா நெருக்கடி காரணமாக வங்கிக் கடன் மாதத்தவணை (இ.எம்.ஐ) குறித்த இறுதி முடிவை நாளை தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இ.எம்.ஐ வட்டி குறித்த இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!
இ.எம்.ஐ வட்டி குறித்த இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், ஆலைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது தளர்வளிக்கப்பட்டிருந்தாலும் ஊரடங்கின் முந்தைய விளைவுகளால் வேலைவாய்ப்பை இழந்த மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் வங்கிகளோ கடனை செலுத்தியே தீர வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிக்கடன் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்படாது என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே இ.எம்.ஐ முறையில் கடனை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது. ஆனால், கட்ட வேண்டிய மாதத்தவணை மீது மேலும் வட்டி வசூலிப்பதாக ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக நடைபெற்று வருகின்றது. முன்னதாக, கடன் செலுத்துவோரின் பாதிப்புக்கு மத்திய அரசின் பொது முடக்க உத்தரவே காரணம் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப்.1) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, "வங்கி கடனாளிகளின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடி காலக்கட்டத்தில் காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட இ.எம்.ஐ.களுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருப்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொண்டுள்ளன. அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும்" என தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம்,"மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உறுதியான பதிலை பெற்று, அது குறித்து நாளை (செப்டம்பர் 2) உரிய முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், ஆலைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது தளர்வளிக்கப்பட்டிருந்தாலும் ஊரடங்கின் முந்தைய விளைவுகளால் வேலைவாய்ப்பை இழந்த மக்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் வங்கிகளோ கடனை செலுத்தியே தீர வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிக்கடன் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்படாது என தனியார் வங்கிகள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே இ.எம்.ஐ முறையில் கடனை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியது. ஆனால், கட்ட வேண்டிய மாதத்தவணை மீது மேலும் வட்டி வசூலிப்பதாக ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக நடைபெற்று வருகின்றது. முன்னதாக, கடன் செலுத்துவோரின் பாதிப்புக்கு மத்திய அரசின் பொது முடக்க உத்தரவே காரணம் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப்.1) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா, "வங்கி கடனாளிகளின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடி காலக்கட்டத்தில் காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட இ.எம்.ஐ.களுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருப்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொண்டுள்ளன. அவகாசத்தை 2 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும்" என தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம்,"மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி உறுதியான பதிலை பெற்று, அது குறித்து நாளை (செப்டம்பர் 2) உரிய முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.