ETV Bharat / bharat

ஊரடங்கில் பிறந்த குழந்தை: 'லாக்டவுன்' பெயர் சூட்டிய வெளிமாநிலத் தொழிலாளர்கள்!

அகர்தலா: வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கில் பிறந்த தனது குழந்தைக்கு லாக்டவுன் எனப் பெயர் சூட்டியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

author img

By

Published : Apr 22, 2020, 11:15 AM IST

்ே்
ே்ே

கரோனா பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கில் தினசரி வேலைக்காக வந்திருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்தான் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் பவுரி, மஞ்சு தம்பதியினர், திரிபுரா மாநிலத்திற்கு 6 மாதத்திற்கு ஒருமுறை நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யவதற்கு வருவார்கள். அப்படி வந்த நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தியதால் சஞ்சயும், கர்ப்பமாக இருந்த அவரது மனைவி மஞ்சுவும் சிக்கிகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவர்களுடன் சேர்ந்து 63 தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன. இதையடுத்து, இவர்கள் அனைவரையும் திரிபுரா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தங்கவைத்து அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், சஞ்சயின் மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அலுவலர்கள் அழைத்துச் சென்ற காரணத்தினால் சிக்கலின்றி குழந்தை பிறந்தது. இந்தத் தம்பதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், சொந்த ஊருக்குப் பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள் என அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில், தனது குழந்தை பிறந்ததால் 'லாக்டவுன்' எனப் பெயர்சூட்டியுள்ளதாகக் குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர். தாய், குழந்தையின் உடல்நிலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இலவசமாக பாத அழுத்த சிகிச்சை... தூய்மைப் பணியாளர்களின் வலி போக்கும் வாலிபர்!

கரோனா பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கில் தினசரி வேலைக்காக வந்திருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்தான் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் பவுரி, மஞ்சு தம்பதியினர், திரிபுரா மாநிலத்திற்கு 6 மாதத்திற்கு ஒருமுறை நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யவதற்கு வருவார்கள். அப்படி வந்த நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தியதால் சஞ்சயும், கர்ப்பமாக இருந்த அவரது மனைவி மஞ்சுவும் சிக்கிகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவர்களுடன் சேர்ந்து 63 தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்தன. இதையடுத்து, இவர்கள் அனைவரையும் திரிபுரா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தங்கவைத்து அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், சஞ்சயின் மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அலுவலர்கள் அழைத்துச் சென்ற காரணத்தினால் சிக்கலின்றி குழந்தை பிறந்தது. இந்தத் தம்பதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், சொந்த ஊருக்குப் பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள் என அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில், தனது குழந்தை பிறந்ததால் 'லாக்டவுன்' எனப் பெயர்சூட்டியுள்ளதாகக் குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர். தாய், குழந்தையின் உடல்நிலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: இலவசமாக பாத அழுத்த சிகிச்சை... தூய்மைப் பணியாளர்களின் வலி போக்கும் வாலிபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.