ETV Bharat / bharat

வயநாட்டில் தூப்பாக்கிச் சூடு: தமிழ்நாடு மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!

author img

By

Published : Nov 3, 2020, 3:21 PM IST

Updated : Nov 3, 2020, 7:10 PM IST

வயநாடு (கேரளா): வலரம் குன்னிலில் தண்டர்போல்ட் பிரிவு காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Maoist encounter in wayanad kerala
Maoist encounter in wayanad kerala

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள படிஞ்சாரதாரா வனப்பகுதி அருகில் உள்ள வலரம் குன்னில், இன்று (நவ.03) காலை தண்டர்போல்ட் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

அதில், மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து தண்டர்போல்ட் காவல்துறையினர் கூறுகையில், "வலரம் குன்னில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒருவர் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள படிஞ்சாரதாரா வனப்பகுதி அருகில் உள்ள வலரம் குன்னில், இன்று (நவ.03) காலை தண்டர்போல்ட் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

அதில், மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து தண்டர்போல்ட் காவல்துறையினர் கூறுகையில், "வலரம் குன்னில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒருவர் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை... முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய 400 காவலர்கள்!

Last Updated : Nov 3, 2020, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.