ETV Bharat / bharat

உடற்கூறாய்வு செய்ய மறந்த மருத்துவர்கள்... 5 நாள்களாக பிணவறையிலிருந்த குழந்தையின் சடலம்!

author img

By

Published : Sep 18, 2020, 8:00 PM IST

எம்.ஒய் மருத்துவமனையில் குழந்தையின் சடலத்திற்கு உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் மறந்ததால், 5 நாள்களாக பிணவறையின் குளிரூட்டும் பெட்டியிலே சடலம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

baby
baby

இந்தூர்: எம்.ஒய் மருத்துவமனையில் குழந்தையின் சடலத்திற்கு உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் மறந்ததால், 5 நாள்களாக பிணவறையின் குளிரூட்டும் பெட்டியிலே சடலம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் (எம்.ஒய்) மருத்துவமனையின் பிணவறையிலிருந்து குழந்தையின் சடலத்தை மருத்துவ ஊழியர்கள் கண்டெடுத்தனர். அக்குழந்தையின் சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பபட்ட நிலையில், மருத்துவர்கள் உடற்கூறாய்வு மேற்கொள்ள மறந்துவிட்டதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாதை குழந்தையின் சடலம் கடந்த 12ஆம் தேதி எம்ஒய் மருத்துவமனையின் பிணவறையில் உடற்கூறாய்வுக்காக குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவர்கள் வேறு வேலையின் காரணமாக குழந்தையின் சடலத்திற்கு உடற்கூறாய்வு செய்ய மறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இத்தகவலை மறுத்துவிட்டது.

இச்சம்பவமானது அதே மருத்துவமனையின் பிணவறையிலிருந்து உடல் சிதைந்த நிலையில் ஒருவரின் சடலத்தை மீட்டெடுத்த ஒரு நாளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தூர்: எம்.ஒய் மருத்துவமனையில் குழந்தையின் சடலத்திற்கு உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் மறந்ததால், 5 நாள்களாக பிணவறையின் குளிரூட்டும் பெட்டியிலே சடலம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் (எம்.ஒய்) மருத்துவமனையின் பிணவறையிலிருந்து குழந்தையின் சடலத்தை மருத்துவ ஊழியர்கள் கண்டெடுத்தனர். அக்குழந்தையின் சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பபட்ட நிலையில், மருத்துவர்கள் உடற்கூறாய்வு மேற்கொள்ள மறந்துவிட்டதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாதை குழந்தையின் சடலம் கடந்த 12ஆம் தேதி எம்ஒய் மருத்துவமனையின் பிணவறையில் உடற்கூறாய்வுக்காக குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவர்கள் வேறு வேலையின் காரணமாக குழந்தையின் சடலத்திற்கு உடற்கூறாய்வு செய்ய மறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இத்தகவலை மறுத்துவிட்டது.

இச்சம்பவமானது அதே மருத்துவமனையின் பிணவறையிலிருந்து உடல் சிதைந்த நிலையில் ஒருவரின் சடலத்தை மீட்டெடுத்த ஒரு நாளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.