ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. நாடாளுமன்றம் இன்று கூடியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் இருஅவைகளிலும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "இந்த சம்பவம் நாடாளுமன்றத்தை திகைப்புக்குள்ளாக்கியுள்ளது. கேள்விநேரம் முடிந்தவுடன் இதுகுறித்து விவாதிக்கப்படும்" என தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இந்த சம்பவத்தை கண்டித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்க சட்டம் போதாது. விழிப்புணர்வு தேவை" என்றார்.
இதுகுறித்து அதிமுகவின் விஜிலா சத்யாநந்த், "'டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். இந்த வழக்கு குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். நீதி தாமதிக்கப்படுவது நீதி மறுக்கப்படுவதற்கு இணை" என்றார்.
பின்னர் பேசிய ஜெயா பச்சன், "இதுகுறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். குற்றவாளிகளை பொதுமக்கள் முன் கொண்டுவந்து கும்பல் வன்முறைக்கு உள்ளாக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பிரியங்கா 'சோப்ரா' வாழ்க - ஷாக் கொடுத்த காங்கிரஸ் பிரமுகர்!